ஆரோக்கிய நிகேதனம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 6: Line 6:
==விருதுகள்==
==விருதுகள்==


இன்நாவல்,1955ல் ரவீந்தர புஸ்கார்  விருதும், 1956 யில்  சாகித்ய ஆகாடமி விருதும் பெற்றது
1955ல் ரவீந்தர புஸ்கார்  விருதும், 1956 யில்  சாகித்ய ஆகாடமி விருதும் பெற்றது


==தமிழ் பதிப்பு==
==தமிழ் பதிப்பு==

Revision as of 23:05, 25 January 2022

ஆரோக்கிய நிகேதனம்


1953ல் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் எழுதப்பட்ட வங்க மொழி நாவல். சுதந்திர இந்தியாவில் ஆயூர்வேத மருத்துவமும் நவீன மருத்துவமும் சந்தித்து கொள்ளும் காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட இந்த நாவல், சமூகத்தில் மரபு நவீனம் என்ற இரண்டு கருத்து நிலைகளின் சந்திப்பு துவக்கத்தை முரண்பாட்டை விரிவாக சித்தரித்து காட்டுகிறது. ஜீவன் மஷாய் என்ற ஆயூர்வேத மருத்துவரை மைய கதாபாத்திரமாக கொண்ட இன்நாவல் அபாரமான கதை சந்தர்பங்களும் தத்துவதேடலும் கொண்டது. இந்நாவல் நவீன இந்திய இலக்கியத்தில் ஒரு சாதனையாகவும் நாவல்கலையின் முன்மாதிரியாகவும் பேரிலக்கியமாகவும் கருதப்படுகிறது. ஆரோக்கிய நிகேததனம் தமிழில் நா.தா.குமாரசாமி அவர்களால் மொழிபெயர்க்க பட்டுள்ளது.

விருதுகள்

1955ல் ரவீந்தர புஸ்கார் விருதும், 1956 யில் சாகித்ய ஆகாடமி விருதும் பெற்றது

தமிழ் பதிப்பு

தமிழில் சாகித்ய அகாடமிமி வெளியீடாக முதல் பதிப்பு 1972 லிலும் இரண்டாவது பதிப்பு 2015 திலும் வந்துள்ளது

ஆசிரியர் பற்றிய குறிப்பு

தாரசங்கர் பந்த்யோபாத்யாய

தாரசங்கர் பந்த்யோபாத்யாய (1898-1971) மேற்கு வங்கம், பீர்பூகும் மாவட்டத்தின் லப்புகூர் என்ற கிராமத்தில் 23-7-1898 அன்று பிறந்தார். தந்தை கரிதாஸ் பந்தோபாத்யா, தாய் பிரபாவதி தேவி. கல்கத்தாவில் கல்லூரி படிப்பை பாதிலேயே விட்டுவிடு 1920 ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்றார். தன்னுடைய அரசியல் செயல்பாட்டுகளுக்காக ஒரு ஆண்டுகாலம் 1930 ல் சிறையில் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்திலிருந்து ஒதுங்கி முழுக்க இலக்கியத்தில் தன்னுடைய கவனத்தைகுவித்திருக்கிறார். சுதந்திரத்திற்க்கு பின் 1952-1960 மேற்கு வங்க பித்தான்* சபையில் 8 ஆண்டுகாலமும், மாநிலங்களவையில் 6 ஆண்டுகாலமும் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஆசிரியர் மொத்தம் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 131 ஆக சொல்லப்படுகிறது. அது 65 நாவல்கள், 53 சிறுகதை தொகுப்புகள், 12 நாடகங்கள், 4 கட்டுரை நூல்கள், 4 வாழ்க்கைவரலாற்று நூல்கள், 2 பயணநூல் மற்றும் கவிதைகள் ஆகும். தாரா சங்கர் பந்தோபாத்தியா ரபிந்தர புஸ்கர், சாகித்திய அகாடமி, ஞான பீடம், பத்ம ஸ்ரீ, பத்ம வீபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

தா. நா. குமாரசாமி (தண்டலம். நா. குமாரசாமி) (1907- 1982). தன் ‘கன்னியாகுமரி’ என்ற முதல் கதையை தினமனியில் இதழில் எழுதினார். பொழுதுபோக்கு இதழ்களில் தன் கதைகளையும் நாவல் தொடர்களையும் எழுதி வந்திருக்கிறார். பள்ளிப்படிப்பில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளை கற்றவர். உளவியல் மற்றும் தத்துவத்தில் கல்லூரி படிப்பை படித்தார். 1930 வங்காளம் சென்று வங்க மொழி கற்றார். வங்க இலக்கியத்திலிருந்து மொழிபெயர்த்த ஆசிரியர்கள், ரபிந்தரனார் தாகுர், சரத் சந்திரர், பக்கிம் சந்திர சட்டர்ஜி, தாராசங்கர் பந்தோபாத்தியா மற்றும் சுபாஷ் சந்திர போஸ்.

தாராசங்கர் பந்தோபாத்தியாவின் பிற நாவல்காளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆகுன் [அக்கினி], ராஇ கமல்[கமலினி],நீல்கண்ட் [நீலகண்டன்], கணதேவதா [கணதேவதை] கவி [கவி]. ஆரோக்கிய நிகேதனம் உட்பட இவை ‘கலைமகள் காரியாலய’ பதிப்பகத்தால் தமிழ் வெளியிடப்பட்டன. அதன்பின் 1972 சாகித்ய ஆகாடமியால் ஆரோக்கி நிகேதனம் மட்டும் தமிழில் மறுபிரசூரம் செய்தது.

கதை சுருக்கம்

‘ஆரோக்கிய நிகேதனம்’ என்பது தேவிபுர கிராமத்தில் உள்ள மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடத்தும் பாரம்பரிய மருத்துவ நிலையம். சுதந்திர இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் தன் புகழை இழந்து நவீன அலோபதி மருத்துவம் நாடு எங்கும் தன் இடத்தை எடுத்துக்கொள்ளும் காலகட்டதை பின்னணியாக கொண்ட கதைக்களம். அந்த பாரம்பரிய மருத்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஜீவன் மஷாய் . தன் தந்தை ஜகபந்து மஷாயின் காலத்தில் மக்களால் வெறும் வைத்தியசாலையாக அழைக்கப்பட்டு வந்த தன் இல்லத்திற்கு இளமையான ஜீவன் மஷாய் ‘ஆரோக்கிய நிகேதனம்’ (ஆரோகியத்தின் வாசல்) என்ற பெயரையிட்டு பெயர்பலகையும் மாட்டி வைத்தியம் நடத்த துவங்குகிறார். அந்த ஆரோக்கிய நிகேதனத்தின் பரிணாமம்தான் நாவலின் கதை, அதன்வழியாக ஒட்டுமொத்த இந்தியாவின் பரிணாமமும். ஆரோக்கிய நிகேதனத்தின் துவக்கத்திலிருந்து முடிவுவரைக்குமான, ஜீவன் மாஸாயின் இளமையிலிருந்து மரணம் வரைக்குமான கதை. அவருக்கு பின்னால் தொடரபடப்போகாத பாரம்பரியம் ஒன்றின் முடிவோடு முடியும் கதை.

கதாபாத்திரங்கள்

  • ஜீவன் மஷாய் – நாவலின் மைய கதாபாத்திரம். ஆயுர்வேத மருத்துவர். அலோபதி மருத்துவம் கற்க முயன்று தோற்றவர். நாடி பார்ப்பதன் மூலம் மரணம் வரும் நாளை கணிக்ககூடிய கலை அறிந்தவர். மரணம் பற்றிய கேள்விகளும் தேடல்களும் உடையவர்.
  • ஜகத் பந்து மஷாய் – ஜீவன் மஷாயின் தந்தை. ஜீவனுக்கு ஆயுர்வேதம் கற்ப்பிக்கிறார்.
  • மஜ்சரி – ஜீவனோடு கல்லூரியில் உடன் படித்த நண்பனின் தங்கை. ஜீவன் அவளை காதலித்தான். ஆனால் மஜ்சரி பூப்பி என்ற பையனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.
  • பூப்பி போஸ் – கல்லூரியில் ஒரு சந்தர்ப்பத்தில் பூப்பியை ஜீவன் தாக்கிவிடுகிறார். அதன் பின் ஜீவன் தன் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போகிறது. பூப்பி போஸ் மஜ்சரியின் காதலன். ஜெமிந்தாரின் பிள்ளை, மருத்துவத்தில் மேல்படிப்பு படிக்க போகிறவன்.
  • ஆத்தர் பெள – மஞ்சரியையும் பூப்பியையும் வெல்ல வேண்டும் என்ற காரணம் ஒன்றுக்காகவே ஜீவன் மஷாய் திருமணம் செய்துகொள்ளும் பேர் அழகி.
  • வனவிஹாரி – இளவயதில் இறந்துபோகும் ஜீவன் மஷாயின் மகன்.
  • தாந்து கோஸால் - ஊருகாய், காரம் மசாலா உணவுகளின் மீது பிரியம் கொண்டவன். அதன் விளைவாக வயிற்று வலி அவனுக்கு நோயாக உள்ளது. ஜீவன் மஷாய் அவன் இறந்துவிடுவான் என்கிறார். டாக்டர் பிரத்யோத் அது சாதரண வயிற்றுவலி எளிதாக அவனை காப்பாற்றிவிட முடியும் என்று சொல்கிறார்.
  • ரங்கால் டாக்டர் – முறையாக மருத்துவம் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாமல் தானாக நூல்களில் இருந்து அலோபதியை கற்றுகொள்கிறார். ஆற்றில் செல்லும் பிணங்களை எடுத்து அறுவை சிகிச்சை செய்து பழகுகிறார். ஜீவன் மஷாய்க்கு இவரே அலோபதியின் அடிப்படைகளை சொல்லிதருகிறார்.
  • டாக்டர் பிரத்யோத் – இளைஞர். தன் புதுமனைவியோடு ஊருக்குள் புதிதாக வந்த அலோபதி டாக்டர். இவருக்கு ஆயூர்வேதம் நாடி பார்ப்பது ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை, அதை ஏமாற்று வேலை என்று நினைக்க கூடியவர். இவருக்கும் ஜீவன் மஷாய்க்குமான முரண்பாடு நாவல் முழுக்க தொடர்கிறது.

இலக்கிய இடம்

எழுத்தாளர் ஜெயமோகன்: ஆரோக்கிய நிகேத்தனம், காலச்சுழிப்பை வாழ்க்கை மோதலின் பேருருவமாக ஆக்குகிறது. உணர்ச்சிகரமான நாடகத்துவமும் அழகிய கவித்துவமும் கைகூடிவந்த நாவல் இது. உலக அளவில்கூட இதற்கினையான ஆக்கங்கள் மிகமிகக் குறைவேயாகும். தரிசனத்திலும் கூறுமுறையிலும் உள்ள தீவிரமான இந்தியத் தன்மையே ஆரோக்கிய நிகேத்தனத்தைப் பேரிலக்கியமாக்குகிறது. ஆரோக்கிய நிகேத்தனத்தின் இன்னொரு சிறப்பம்சம் இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பேருருவம் கொண்டிருக்கும் அடிப்படை வினா ஒன்றை அது பற்பல கோணங்களில் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது என்பதே. ‘வளர்ச்சி என்பது என்ன?’ என்ற வினாதான் அது.


பொது வாசிப்பு

இந்த நாவலை இளமை-முதுமை, கிழக்கு-மேற்க்கு, ஆன்மீகம்-அறிவியல், பழையஇந்தியா -புதியஇந்தியா, மரபு-நவீனம் ஆகிய எண்ணற்ற இருமைகளின் முரண்பாட்டின் கதைவெளி என்று பார்க்கலாம். இன்னொரு வகையில் இது ஜீவன் மாஸ்டர் தன் வாழ்வின் துவக்கதில் இருந்து இறுதிவரை தன் எதிரிகளை எதிர்கொள்ளும் கதை. அது நிறைவுக்கும் விழைவுக்குமான சமர். மறுபுறம் மொத்த நாவலும் காலமாறுதலின் அதுனூடான அகமாறுதலின் பெரும் தொகுப்பை சித்தரிக்கிறது.

ஆயூர்வேதம் மரணம் என்பதை ஏற்றுகொள்ள வேண்டிய இறுதி முடிவு என்ற ஏற்ப்புடன் ஆன்மீக அனுகுமுறையை கொண்டிருக்க, நவீன மருத்தவம் மனிதர்களை தன்னால் வாழவைத்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் இகவாழ்வில் இன்பம்தேடும் இயல்பை கொண்டதாக இருக்கிறது. நாவலின் ஒரு கட்டத்தில் இரண்டு தரப்புகளும் தங்கள் எல்லைகளை, மற்ற தரப்பால் நிறப்படவேண்டிய இடைவெளிகளை கண்டுணர்ந்துகொள்கின்றன. கூடவே மையமென நாவலில் மரணம் என்றால் என்ன என்ற ஜீவன் மஷாயின் வாழ்க்கை குறித்தான அடிப்படை வினா.

கிளைபிரிந்து செல்லும் தனிசாலைகள் ஒவ்வொன்றின் வழியாகவும் சென்றே மொத்த ஊரையும் பார்க்க முடியும். ஆனால் தனிசாலை என்று ஒன்றுமே கிடையாது. ஒவ்வொரு சாலையும் ஒன்றோடு ஒன்று இணைந்தது, தொடர்புடையது. சாலைகளின் வலைபின்னலே ஊர் என்ற முழுமை. இந்த நாவலின் வாசகன் செல்லும் பயணம் என்பது அத்தகையது. ஒவ்வொரு சரடையும் தனியாகவும் அதேசமயம் அதனைத்தும் பின்னி சென்று ஒட்டுமொத்தமாவதன் பேரழகையும் அவன் பார்க்க முடியும்.

பிறமொழி மொழிபெயர்ப்புகள்

வங்க மொழி நாவலான ஆரோகிய நிகேதனம் 9 மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளதாக செல்லபடுகிறது,

ஆங்கிலம் - Enakshi Chattarjee

ஹிந்தி - Hanskumar Tivari

மராத்தி - Shripad Joshi

குஜராத்தி - Ramnik Meghani

மலையாளம் - நிலீனா ஆப்ராம், Prof. M.K.N. Potti

தமிழ் - தா.நா. குமாரசாமி

திரைப்படம்

ஆரோக்கிய நிகேத்தன் நாவல் 1967 ல் பெங்காலி மொழியில் இயக்குனர் பிஜொய் போஸ் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. சிறந்த பெங்காலி திரைப்படத்திற்க்கான தேசிய விருதையும் பெற்றது.