under review

ஆண்டி சுப்பிரமணியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 89: Line 89:
* அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
* அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
* https://www.hindutamil.in/news/opinion/columns/57997-.html
* https://www.hindutamil.in/news/opinion/columns/57997-.html
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
{{ready for review}}
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]

Revision as of 07:53, 4 February 2022

ஆண்டி சுப்பிரமணியம் (ஆண்டி ராம சுப்பிரமணியம்) (1897-1981) தமிழறிஞர், நாடக இயக்குனர், நாடக ஆசிரியர், நாடக ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ் நாடக வரலாற்று நூல், நாடகங்கள் ஒப்பீட்டு ஆய்வு, நாடக கலைக்களஞ்சியம் ஆகியவை நாடகத்துறைக்கு முக்கியப் பங்களிப்புகளாகும். A Theatre Encyclopaedia என்ற நாடகக் கலைக்கலஞ்சியமும், கேரள தோல்பாவைக் கூத்து பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையும் முக்கியமான படைப்புகளாகும்.

பிறப்பு, கல்வி

ஆண்டி சுப்பிரமணியம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் உள்ள பீமநேரி என்ற குக்கிராமத்தில் பிறந்த. ராமசுப்பிரமணியத்துடன் முந்திப் பிறந்த நான்கு பேரும் அற்ப ஆயுளில் மாண்டு போக முருக பக்தரான அவரது தந்தை ஆண்டி என்ற பெயரால் மகனை அழைத்திருக்கிறார். (ஆண்டி என்ற பெயர் ஆயுளைக்கூட்டும் என்பது நம்பிக்கை) ஆண்டி சிறுவயதில் தந்தையை இழந்தார்.

ஆண்டி சுப்பிரமணியம் கோட்டாறு அரசுப்பள்ளி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி எனப் படிப்பை முடித்துவிட்டு திருவனந்தபுரம் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. ஆனர்ஸ் படித்தார். 1917-இல் அன்னிபெசன்ட், அருண்டேல், வாடியா மூவரும் கைது செய்யப்பட்டதற்கான எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஆனர்ஸ் படிப்பை முடிக்காமலானார்.

தனிவாழ்க்கை

  • 1936-1948வரை திருவிதாங்கூர் அரசி சேது பார்வதிபாயின் பேரில் இருந்த ஸ்திரீ தர்மாலாயம் என்ற அமைப்பின் பொறுப்பாளராக ஆண்டி இருந்தார்.
  • 1965-66வரை சென்னைப் பல்கலைக்கழகச் சமஸ்கிருதப் பேராசிரியர் வே. ராகவனின் வேண்டுதலில் மைலாப்பூர் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சிக்கழகத்தின் நூலகராக இருந்தார்.
  • 1967-ல் சென்னை நாட்டிய சங்கத்தின் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பொதுப்பணிகள்

இந்தியச் சாரணர் சங்கத்தின் நிர்வாகியாக கே.எஸ்.காமத் இருந்தபோது ஆண்டி திருவனந்தபுரம் மாவட்டத் துணைத்தலைவராக இருந்திருக்கிறார்.

இலக்கியப்பணிகள்

ஆண்டி தமிழில் 12க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். புரட்சி மூவர், திரட்டுப்பால், யார் மூளைக்காரன்? என்னும் மூன்று நாடகங்களும் தினமணிக் கதிர் வெளியீடாக வந்தன. மாங்கல்யம் நாடகம், பொன்மொழி மாலை என்ற நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டிருந்தது. வேறு சில நாடகங்களை அச்சிட அப்போது தினமணியில் இருந்த பி.ஸ்ரீ உதவியிருக்கிறார். சிறுபிரசுரங்கள், கலைக்களஞ்சியம் உட்பட ஆங்கிலத்தில் அவர் எழுதியவை 20. அவற்றில் சில கையெழுத்துப் பிரதிகளாக இருந்து அழிந்துபோயின.

பத்திரிகை

1936-ல் ஸ்திரீ தர்மம் என்ற இருமொழிப் பத்திரிகையை (ஆங்கிலம், தமிழ்) நடத்தினார்.

நாடகக் கலைப் பங்களிப்பு

பேராசிரியர் ஸ்ரீனிவாசன் துணையுடன் அமெச்சூர் டிராமட்டிக் அசோசியேசன் என்னும் அமைப்பை ஆண்டி ஆரம்பித்தார். அதில் ஷேக்ஸ்பியரின் ஒதல்லோ, மேக்பத் போன்ற நாடகங்கள் மேடை ஏறின. சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகத்தைக்கூட அக்குழு நடத்தியது. மனோகராவில் ஆண்டி சத்தியசீலனாக நடித்தார்.

ஆண்டி நாடக இயக்குநராக ஆனபின்பு போஜன், பாதுகாபட்டாபிஷேகம், நளன், இரண்டு சினேகிதர்கள், கள்வர் தலைவன் போன்ற தமிழ் நாடகங்களை நடத்தினார். ஆண்டி 1926 வரை மேடை நாடகங்களில் கவனம் செலுத்தினார். திருவனந்த புரம் நீதிபதி சங்கரநாராயணன் உதவியுடன் Art Experimental Theatre என்னும் பேரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

கேரளத்தில் பகவதி கோவில்களில் நடிக்கப்பட்ட தோல்பாவைக் கூத்து நிகழ்வில் கம்பராமாயணத்தின் பாடல்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றைச் சங்கீத அகதமி தொகுத்து Kamban Epic as Shadow Play என்னும் சிறு நூலாக வெளியிட்டது. மத்தவிலாசக் கூத்து அடிப்படையில் பெற்ற தகவல்களை The Ascendancy and Eclipse of Jainism in Tamilnadu என்ற கட்டுரையில் எழுதினார்.

சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையில் ‘நவீனத் தமிழ் அரங்கின் புத்துயிர்ப்பும் வரலாறும்’ என்னும் தலைப்பில் பத்துவாரங்கள் எழுதியிருக்கிறார். (1949-50) அது நாடக வரலாறு, ஆய்வு தொடர்பான கட்டுரை. தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் (பகுதி-5) உள்ள நாட்டியம் பற்றிய அவரது கட்டுரை டாக்டர் வே. ராகவனின் தூண்டுதலால் எழுதப்பட்டது. ஆண்டி 1961-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் Theatres - Indian and Western. Their Mutual Impacts என்ற தலைப்பில் விரிவாகப் பேசியிருக்கிறார்.

நாடக ஆய்வு

1945க்குப் பின் நாடக ஆராய்ச்சியில் அவர் தீவிரமானார். கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் சிபாரிசில் UNESCO அமைப்பிற்காக 1961-65ஆம் ஆண்டுகளில் Compilation of Directory of Indian Culture என்னும் தலைப்பில் ஆண்டி செய்த ஆய்வு புத்தகவடிவில் வந்தது. ஆனால் அதன் பிரதிகள் விற்பனைக்கு வராமலே தொலைந்துவிட்டன. 1897-ல் ஆண்டி சுப்பிரமணியம் கிரேக்க நாடகங்களையும் - சமஸ்கிருத நாடகங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். ஆண்டிக்கு இந்திய நாடகங்களில் குறிப்பாகப் பழைய சமஸ்கிருத நாடகங்களில்கூட கிரேக்கப் பாதிப்பு உண்டு என்பதில் முழுநம்பிக்கை இருந்தது

  • பரதநாட்டிய சாஸ்திரத்தில் இந்திய நாடகங்கள் மேற்கோளாகக் காட்டப்படவில்லை என்ற காரணத்தைச் சொல்லி அலெக்சாண்டரின் படையெடுப்பு வழி பரவிய கிரேக்க நாடகங்களின் பாதிப்பே பரத சாஸ்திரம் என்ற கருத்தை ஆதாரப்பூர்வமாய் மறுத்து ஆண்டி எழுதிய கருத்துகள் முக்கியமானவை.
  • மிருச்சகடிகம் நாடகம் யவன நாட்டுப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக்கொண்டது என்றார்.
  • விசாகதேவர் (கி.பி. 9 நூற்றாண்டு) இயற்றிய தேவிசந்திரகுப்தம் பைபிளின் பழைய ஏற்பாடு பகுதியில் வரும் ஜூடித் அத்தியாயத்தில் காணப்படும் கதையின் தாக்கம் என்றார் ஆண்டி.
  • தமிழகத்தில் குறிப்பிட்ட சில சிவன் கோவில்களில் தேவதாசிகளால் நடிக்கப்பட்ட சாரங்கநாதன் நாடகத்தில் யூரிபிடிஸ்ஸின் ஹிப்போலிடஸ் என்ற நாடகத்தின் தாக்கம் உள்ளது என்றார்.

நாடக கலைக்களஞ்சியம்

A Theatre Encyclopaedia என்னும் தலைப்பில் அவர் சேகரித்த கலைக்களஞ்சியம் 60,000 உட்தலைப்புகள் கொண்டது. கையெழுத்துப் பிரதியிலிருந்த அந்த நூலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அதைத் தவறவிட்டது; அதன் பிறகும் ஆண்டி இன்னும் ஆண்டு முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்து விடலாம் என்றாராம். அப்போது அவருக்கு வயது 80.

நாடக அமைப்புகள்

  • அமெச்சூர் டிராமட்டிக் அசோசியேசன்
  • Art Experimental Theatre

என்ற அமைப்புகளை ஆரம்பித்தவர்.

இயக்கிய நாடகங்கள்

தமிழ்

  • மனோகரா
  • போஜன்
  • பாதுகாபட்டாபிஷேகம்
  • நளன்
  • இரண்டு சினேகிதர்கள்
  • கள்வர் தலைவன்
  • மாங்கல்யம்

ஆங்கிலம்

  • ஷேக்ஸ்பியரின் ஒதல்லோ
  • மேக்பத்

திரைப்படம்

1950-51இல் நடிகை என்ற தமிழ் திரைப்படத்திற்கு (சேச்சி என்ற மலையாளக் கதையின் தழுவல்) ஆண்டி கதை, வசனம் எழுதியிருக்கிறார். படம் படுதோல்வி அடைந்தது.

அரசியல்

கோவில் நுழைவு அனுமதி அறிக்கை வந்த காலமான 1936-ல் கமலாதேவி சட்டோபாத்தியாயாவின் தலைமையில் 60 தலித் இளைஞர்களை அழைத்துக்கொண்டு திருவிதாங்கூர் கோவில்களுக்குள் நுழைந்திருக்கிறார்.

மறைவு

84 வயதில் தள்ளாமையின் காரணமாகப் பீகாரில் இருந்த மகன் வீட்டிற்குப் போனார். அங்கேயே வாழ்ந்து சில வருடங்களில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • A Theatre Encyclopaedia
  • Compilation of Directory of Indian Culture என்னும் தலைப்பில் ஆண்டி செய்த ஆய்வு அப்போதே புத்தகவடிவில்
  • Kamban Epic as Shadow Play என்னும் சிறு நூலாக
  • The Ascendancy and Eclipse of Jainism in Tamilnadu
  • நவீனத் தமிழ் அரங்கின் புத்துயிர்ப்பும் வரலாறும்
  • தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் (பகுதி-5) உள்ள நாட்டியம் பற்றிய அவரது கட்டுரை
  • Theatres - Indian and Western. Their Mutual Impacts (1963).

நாடகம்

  • புரட்சி மூவர்,
  • திரட்டுப்பால்,
  • யார் மூளைக்காரன்?
  • மாங்கல்யம் நாடகம்

அவரைப்பற்றி

சென்னையில் 84 வயதான ஆண்டி ராம சுப்பிரமணியத்தைச் சந்தித்ததை வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் (யாத்ரா 1982)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.