அ. ரா. மாதவராய முதலியார்
From Tamil Wiki
அ.மாதவராய முதலியார் ( இறப்பு-1927) தமிழில் குறுகிய காலகட்டத்தில் அதிகமான நாவல்களை எழுதியவர் எனஅ.மாதவராஜ முதலியார் குறிப்பிடப்படுகிறார்.
வாழ்க்கை
அ.மாதவராய முதலியார் பற்றிய செய்திகளேதும் பொதுவாக கிடைப்பதில்லை. இவர் குணபோதினி என்னும் இதழை நடத்தினார். இவருடைய ஒரு நாவல் மறைந்தபின் வெளிவந்தது. அதில் மணி திருநாவுக்கரசு முதலியார் எழுதிய முன்னுரையில் அ.மாதவராய முதலியார் இருபத்தைந்து வயதுக்குள் 26 நாவல்களை எழுதினார் என்றும் 1927க்குள் மறைந்தார் என்றும் சொல்கிறார்.
நூல்கள்
- கனகரத்தினம்
- லோகநாயகி
- வேதவல்லி
- மதுசூதனன்
- ஜகதலஜகச்சோதி
- மாணிக்கவல்லி
உசாத்துணை
- தமிழ்நாவல்- சிட்டி சிவபாதசுந்தரம் ( கிறிஸ்தவ இலக்கிய சங்கம்)