அ. ரா. மாதவராய முதலியார்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 19: | Line 19: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{ | {{second review completed}} |
Revision as of 07:55, 7 February 2022
அ. மாதவராய முதலியார் (இறப்பு-1927) தமிழில் குறுகிய காலகட்டத்தில் அதிகமான நாவல்களை எழுதியவர் என குறிப்பிடப்படுகிறார்.
வாழ்க்கை
அ. மாதவராய முதலியார் பற்றிய செய்திகளேதும் பொதுவாக கிடைப்பதில்லை. இவர் குணபோதினி (பெங்களூர் குணபோதினி) என்னும் இதழை நடத்தினார். இவருடைய ஒரு நாவல் இவர் மறைவுக்குப் பின்னர் வெளிவந்தது. அதில் மணி திருநாவுக்கரசு முதலியார் எழுதிய முன்னுரையில் அ. மாதவராய முதலியார் இருபத்தைந்து வயதுக்குள் 26 நாவல்களை எழுதினார் என்றும் 1927-க்குள் மறைந்தார் என்றும் சொல்கிறார்.
நூல்கள்
- காதலற்ற கல்யாணம் அல்லது பெண் வீட்டாரைக் கொள்ளையடித்தல்
- கனகரத்தினம்
- லோகநாயகி
- வேதவல்லி
- மதுசூதனன்
- ஜகதலஜகச்சோதி
- மாணிக்கவல்லி
உசாத்துணை
- தமிழ்நாவல்- சிட்டி சிவபாதசுந்தரம் ( கிறிஸ்தவ இலக்கிய சங்கம்)
- மாதவராய முதலியார், அ. ரா.(Mātavarāya mutaliyār, a. Rā.)(1928).தி. இராஜகோபால் முதலியார் .சென்னை.
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.