அ. சிதம்பரநாதன் செட்டியார்: Difference between revisions
(சரி பார்ப்பு செய்யப்பட்டது - ராஜகோபாலன் ஜா) |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:A_chidambaranathan_chettiar.jpeg|right]]அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - | [[File:A_chidambaranathan_chettiar.jpeg|right]] | ||
அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - ஜனவரி 22, 1967) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கில- தமிழ் அகராதிக்கு தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றவர். தமிழ் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர். 2009-ல் இவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. | |||
== | == பிறப்பு, கல்வி == | ||
சிதம்பரநாதன் செட்டியார் கும்பகோணத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செட்டியார், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு ஏப்ரல் 3, 1907 அன்று பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உண்டு. கும்பகோணம் பேட்டையிலுள்ள தொடக்கப் பள்ளியிலும், பின்னர் நேடிவ் உயர்நிலைப் பள்ளியிலும் இறுதி வகுப்பு வரை படித்துத் தேறினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் படிப்பில் (B.A.) மாநிலத்திலேயே முதலாவதாக தேறி [[ஜி.யு. போப்|டாக்டர் ஜி.யு. போப்]] நினைவு தங்கப் பதக்கம் பெற்றார். | சிதம்பரநாதன் செட்டியார் கும்பகோணத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செட்டியார், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு ஏப்ரல் 3, 1907 அன்று பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உண்டு. கும்பகோணம் பேட்டையிலுள்ள தொடக்கப் பள்ளியிலும், பின்னர் நேடிவ் உயர்நிலைப் பள்ளியிலும் இறுதி வகுப்பு வரை படித்துத் தேறினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் படிப்பில் (B.A.) மாநிலத்திலேயே முதலாவதாக தேறி [[ஜி.யு. போப்|டாக்டர் ஜி.யு. போப்]] நினைவு தங்கப் பதக்கம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1933-ல் தமிழ் முதுகலை (M.A.) வகுப்பில் சேர்ந்து 1935-ல் முதலிடத்தில் தேறினார். தமிழ் ஆராய்ச்சியில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். | ||
1928-ல் சென்னை பல்கலைக்கழக அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். பின்னர் தலைமைச் செயலகத்திலும் எழுத்தராகப் பணியாற்றினார். அப்போது அரசு நடத்திய வருவாய்த்துறைத் தேர்விலும், வரவுசெலவு கணக்குத் தேர்விலும் முதலிடம் பெற்றார். அன்றைய அரசு அவரை சென்னை அரசாங்க முகமதியக் கல்லூரியில் (அண்ணா சாலையிலுள்ள இன்றைய அரசு கலைக் கல்லூரி) தமிழாசிரியராக நியமித்தது. மூன்று ஆண்டுகள் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பின் பாலக்காடு அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். | == தனிவாழ்க்கை == | ||
1933-ல் பெரியநாயகியை மணந்தார்.செட்டியாருக்குக் குழந்தை இல்லை. 1928-ல் சென்னை பல்கலைக்கழக அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். பின்னர் தலைமைச் செயலகத்திலும் எழுத்தராகப் பணியாற்றினார். அப்போது அரசு நடத்திய வருவாய்த்துறைத் தேர்விலும், வரவுசெலவு கணக்குத் தேர்விலும் முதலிடம் பெற்றார். அன்றைய அரசு அவரை சென்னை அரசாங்க முகமதியக் கல்லூரியில் (அண்ணா சாலையிலுள்ள இன்றைய அரசு கலைக் கல்லூரி) தமிழாசிரியராக நியமித்தது. மூன்று ஆண்டுகள் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பின் பாலக்காடு அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். | |||
மீண்டும் சென்னை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளரானார். பிறகு தான் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகப் பொறுப்பேற்றார். | |||
== இலக்கியவாழ்க்கை == | |||
ஏ.சி.செட்டியார் தமிழில் 18, ஆங்கிலத்தில் 5 என 23 நூல்கள் எழுதியிருக்கிறார். இலக்கணம் தொடர்பாக இரண்டு, தனியார் வரலாறு மூன்று, வரலாறு ஒன்று, சிறுகதை விமர்சனம் தொடர்பாக மூன்று, பதிப்பு ஒன்று, ஒரு மொழிபெயர்ப்பு (சேக்ஸ்பியரின் ஒத்தல்லோ) ஏனையவை கட்டுரைத் தொகுதிகள். செட்டியாரின் நூல்களில் பெரும்பாலானவை செந்தமிழ் போன்ற இதழ்களில் வந்தவற்றின் தொகுப்புகள். முன்பனிக்காலம் (1951), இளவேனில் இன்கவி (1969) இரண்டும் பாடத்திட்டத்தில் இருந்தவை. | |||
கட்டுரைக்கொத்து (1933) செந்தமிழ்ச் செல்வியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் காட்டும் உலகு என்ற நூல் (1957) தமிழ்வழி எதையும் படிக்க முடியும் என்பதை மொழியியல் ரீதியாக விளக்குவது. தமிழோசை (1954) ஒரு மொழிநூல். காக்காய பிடித்தலும் குருவி பிடித்தலும் (1940) இலக்கண நூல். | |||
இவர் எழுதிய வரலாற்று நூல்களில் இந்தியச் சரித்திர மாலை (1938) தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உழைப்பால் உயர்ந்த ஒருவர் (1952) புத்தர் வாஷிங்டன் என உலகச் சான்றோர்கள் வரலாற்றைக் கூறுவது. பெரியார் மன்றோ (1945) இளைஞர்களுக்காக எழுதிய தனிவரலாற்று நூல். அன்பர் (1955) தனி வரலாற்று நூல். | |||
சாகித்ய அகதமி நிறுவனத்திற்காக சேக்ஸ்பியரின் ஒதல்லோவை மொழிபெயர்த்திருக்கிறார். இதே நிறுவனத்திற்காகத் தமிழில் சிறந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்திருக்கிறார். சிறுகதைக் களஞ்சியம் என்னும் தலைப்பில் வந்த(1959) இந்நூலில் நீண்ட முகவுரை உள்ளது. இத்தொகுதியில் அகிலன், இராஜாஜி, மாயாவி, சோமு, ரா.கி. ரங்கராசன், கி.வா.ஜ. என்பவர்களின் கதைகளுடன் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன் ஆகியோரின் கதைகளும் உள்ளன. இதன் இரண்டாவது பகுதி வெளிவரவில்லை. | |||
1958- | ஏ.சி.செட்டியாரின் பிஎச்டி. ஆய்வேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் "Advanced Studies in Tamil Prosody" என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது (1958). இந்த நூல் செய்யுள் யாப்பு அறிமுகத்தை கூறுவது. செட்டியார் இவை தவிர Silapadikaram the Earlier Tamil Epic (1950). Indian word is English Dictionary (1964), Ancient Tamil kings - their High ideals (ஆ.இ) ஆகிய சிறுபிரசுரங்களையும் வெளியிட்டுள்ளார். லெனின்கிராடு பல்கலைக்கழகத்தில் "உலகிற்குத் திருக்குறள் வழங்கும் செய்தி” என்ற தலைப்பில் இவர் பேசிய பேச்சு (1960) சோவியத் நாடு இதழில் வந்தது. இதற்கு ரஷ்ய மொழிபெயர்ப்பும் உண்டு . | ||
=== முக்கியப் பொறுப்புகள் === | |||
* அண்ணாமலைக் கல்விக்குழு உறுப்பினர் (1938) | |||
* ஆட்சிக்குழு உறுப்பினர் (1941) | |||
* சென்னை அரசுப் பள்ளிகளின் குழு உறுப்பினர் (1942-45) | |||
* சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் (1935-40) | |||
* ஆந்திரா, மைசூர், திருவிதாங்கூர் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினர் | |||
* 1946-ல் கலைச்சொல் உருவாக்க ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பிறகு கலைச்சொல் உருவாக்க குழுவின் தலைமை பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றார். ஆங்கில - தமிழ் சொற்களஞ்சியம் நூல் இவரது தலைமையில் வெளியிடப்பட்டது. | |||
* சென்னையில் நடந்த இந்தியப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பிரதிநிதி (1948) | |||
* 1958-ல் சட்ட மேலவைக்கு போட்டியிட்டு வென்றார். இரண்டு முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார். | |||
* சாகித்ய அகதமி உறுப்பினர் (1958) | |||
* மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். | |||
* 1960ஆம் ஆண்டு, உருஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார். | |||
* 1961-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உரையாற்றினார். | |||
* 1964-ல் பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | |||
* மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியின் முதல்வர் (1965-1967) | |||
== | == விருதுகள் == | ||
* | * 1928-ல் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று "டாக்டர் ஜி. யு. போப் நினைவு" தங்கப் பதக்கத்தை வாங்கினார். | ||
* தருமபுரம் ஆதீனம், "செந்தமிழ்க் காவலர்" எனும் சிறப்புப் பட்டம் வழங்கியது. | |||
* மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பி.டி. ராசன் இவரைப் பாராட்டிச் செந்தமிழ்க் காவலர் என்னும் பட்டம் கொடுத்தார் (1955). | |||
== இறுதிக்காலம் == | |||
செட்டியார் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதல்வராய் இருந்தபோது வாதநோயால் அவதிப்பட்டார்; பின் மலேரியா நோய் வந்தது. 1960-67 இல் உடல்நலம் தேறி வந்தபோது ஜனவரி 22, 1967-ல் மதுரை திருநகர் தளக்கர்குளம் என்ற இடத்தில் ஒரு பாழுங்கிணற்றில் உயிரற்ற பிணமாய் மிதந்துகிடந்தார். கொலையா, தற்கொலையா என்று சந்தேகப்பட்ட செய்தியும் பத்திரிகைகளில் வந்தன | |||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
Line 37: | Line 48: | ||
* கட்டுரைக் கொத்து (1933) | * கட்டுரைக் கொத்து (1933) | ||
* காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (சிற்றிலக்கண நூல் – 1940) | * காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (சிற்றிலக்கண நூல் – 1940) | ||
* முன்பனிக்காலம் (இலக்கியக் கட்டுரைகள் – 1951) | * முன்பனிக்காலம் (இலக்கியக் கட்டுரைகள் – 1951) | ||
* சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954) | * சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954) | ||
* தமிழோசை (1956) | * தமிழோசை (1956) | ||
* தமிழ் காட்டும் உலகு (இலக்கியக் கட்டுரைகள் – 1957) | * தமிழ் காட்டும் உலகு (இலக்கியக் கட்டுரைகள் – 1957) | ||
* வீட்டுத் திருமகள் (கட்டுரைகள் – 1958) | * வீட்டுத் திருமகள் (கட்டுரைகள் – 1958) | ||
* மன்னுயிர்க்கன்பர் (ஆல்பர்ட் சுவைட்சர் – 1958) | * மன்னுயிர்க்கன்பர் (ஆல்பர்ட் சுவைட்சர் – 1958) | ||
* சிறுகதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர் – 1959) | * சிறுகதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர் – 1959) | ||
* ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம் (தலைமைப் பதிப்பாசிரியர்) | * ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம் (தலைமைப் பதிப்பாசிரியர்) | ||
* மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆயிரந்திரு நாம அர்ச்சனை (1967) | * மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆயிரந்திரு நாம அர்ச்சனை (1967) | ||
Line 56: | Line 61: | ||
* தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977) | * தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977) | ||
* ஒதெல்லோ (ஆங்கில நாடகத் தமிழ் மொழி பெயர்ப்பு – சாகித்ய அகாதெமிக்காக) | * ஒதெல்லோ (ஆங்கில நாடகத் தமிழ் மொழி பெயர்ப்பு – சாகித்ய அகாதெமிக்காக) | ||
=== வரலாற்று நூல்கள் === | |||
* சரித்திர மாலை (1938) | |||
* உழைப்பால் உயர்ந்த ஒருவர் (1952) | |||
* பெரியார் மன்றோ (1945) | |||
* அன்பர் (1955) | |||
=== கட்டுரைகள் === | |||
* எனது மேல்நாட்டு அனுபவம் (தமிழ்நாடு ஞாயிறு மலர் (1955) | |||
* மாஸ்கோ அனுபவம் (சோவியத் நாடு 1968), | |||
* ராதா இதழின் பேட்டி (1365) | |||
=== ஆங்கிலம் === | |||
* Silappadhikaram: The Earliest Tamil Epic (1950) | |||
* Advanced Studies in Tamil Prosody (Doctoral thesis – 1942) | |||
* An Introduction To Tamil Poetry (1958) | |||
* Indian word is English Dictionary (1964) | |||
* Ancient Tamil kings - their High ideals | |||
== | == உசாத்துணை == | ||
* ந. வேலுசாமி எழுதிய '''இந்திய இலக்கியச் சிற்பிகள்: அ. சிதம்பரநாதச் செட்டியார்''' (சாகித்ய அகாதெமி முதல் பதிப்பு – 2005) | * அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம் | ||
* ந. வேலுசாமி எழுதிய '''இந்திய இலக்கியச் சிற்பிகள்: அ. சிதம்பரநாதச் செட்டியார்''' (சாகித்ய அகாதெமி முதல் பதிப்பு – 2005) | |||
* [https://siliconshelf.wordpress.com/2019/02/27/சிதம்பரநாதன்-செட்டியார் சிலிகன்ஷெல்ஃப் பதிவு] | * [https://siliconshelf.wordpress.com/2019/02/27/சிதம்பரநாதன்-செட்டியார் சிலிகன்ஷெல்ஃப் பதிவு] | ||
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --> | <!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section --> | ||
{{ | {{ready for review}} | ||
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --> | <!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section --> | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 19:54, 5 February 2022
அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - ஜனவரி 22, 1967) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கில- தமிழ் அகராதிக்கு தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றவர். தமிழ் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர். 2009-ல் இவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
பிறப்பு, கல்வி
சிதம்பரநாதன் செட்டியார் கும்பகோணத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செட்டியார், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு ஏப்ரல் 3, 1907 அன்று பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உண்டு. கும்பகோணம் பேட்டையிலுள்ள தொடக்கப் பள்ளியிலும், பின்னர் நேடிவ் உயர்நிலைப் பள்ளியிலும் இறுதி வகுப்பு வரை படித்துத் தேறினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் படிப்பில் (B.A.) மாநிலத்திலேயே முதலாவதாக தேறி டாக்டர் ஜி.யு. போப் நினைவு தங்கப் பதக்கம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1933-ல் தமிழ் முதுகலை (M.A.) வகுப்பில் சேர்ந்து 1935-ல் முதலிடத்தில் தேறினார். தமிழ் ஆராய்ச்சியில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர்.
தனிவாழ்க்கை
1933-ல் பெரியநாயகியை மணந்தார்.செட்டியாருக்குக் குழந்தை இல்லை. 1928-ல் சென்னை பல்கலைக்கழக அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். பின்னர் தலைமைச் செயலகத்திலும் எழுத்தராகப் பணியாற்றினார். அப்போது அரசு நடத்திய வருவாய்த்துறைத் தேர்விலும், வரவுசெலவு கணக்குத் தேர்விலும் முதலிடம் பெற்றார். அன்றைய அரசு அவரை சென்னை அரசாங்க முகமதியக் கல்லூரியில் (அண்ணா சாலையிலுள்ள இன்றைய அரசு கலைக் கல்லூரி) தமிழாசிரியராக நியமித்தது. மூன்று ஆண்டுகள் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பின் பாலக்காடு அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார்.
மீண்டும் சென்னை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளரானார். பிறகு தான் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகப் பொறுப்பேற்றார்.
இலக்கியவாழ்க்கை
ஏ.சி.செட்டியார் தமிழில் 18, ஆங்கிலத்தில் 5 என 23 நூல்கள் எழுதியிருக்கிறார். இலக்கணம் தொடர்பாக இரண்டு, தனியார் வரலாறு மூன்று, வரலாறு ஒன்று, சிறுகதை விமர்சனம் தொடர்பாக மூன்று, பதிப்பு ஒன்று, ஒரு மொழிபெயர்ப்பு (சேக்ஸ்பியரின் ஒத்தல்லோ) ஏனையவை கட்டுரைத் தொகுதிகள். செட்டியாரின் நூல்களில் பெரும்பாலானவை செந்தமிழ் போன்ற இதழ்களில் வந்தவற்றின் தொகுப்புகள். முன்பனிக்காலம் (1951), இளவேனில் இன்கவி (1969) இரண்டும் பாடத்திட்டத்தில் இருந்தவை.
கட்டுரைக்கொத்து (1933) செந்தமிழ்ச் செல்வியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் காட்டும் உலகு என்ற நூல் (1957) தமிழ்வழி எதையும் படிக்க முடியும் என்பதை மொழியியல் ரீதியாக விளக்குவது. தமிழோசை (1954) ஒரு மொழிநூல். காக்காய பிடித்தலும் குருவி பிடித்தலும் (1940) இலக்கண நூல்.
இவர் எழுதிய வரலாற்று நூல்களில் இந்தியச் சரித்திர மாலை (1938) தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உழைப்பால் உயர்ந்த ஒருவர் (1952) புத்தர் வாஷிங்டன் என உலகச் சான்றோர்கள் வரலாற்றைக் கூறுவது. பெரியார் மன்றோ (1945) இளைஞர்களுக்காக எழுதிய தனிவரலாற்று நூல். அன்பர் (1955) தனி வரலாற்று நூல். சாகித்ய அகதமி நிறுவனத்திற்காக சேக்ஸ்பியரின் ஒதல்லோவை மொழிபெயர்த்திருக்கிறார். இதே நிறுவனத்திற்காகத் தமிழில் சிறந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்திருக்கிறார். சிறுகதைக் களஞ்சியம் என்னும் தலைப்பில் வந்த(1959) இந்நூலில் நீண்ட முகவுரை உள்ளது. இத்தொகுதியில் அகிலன், இராஜாஜி, மாயாவி, சோமு, ரா.கி. ரங்கராசன், கி.வா.ஜ. என்பவர்களின் கதைகளுடன் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன் ஆகியோரின் கதைகளும் உள்ளன. இதன் இரண்டாவது பகுதி வெளிவரவில்லை.
ஏ.சி.செட்டியாரின் பிஎச்டி. ஆய்வேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் "Advanced Studies in Tamil Prosody" என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது (1958). இந்த நூல் செய்யுள் யாப்பு அறிமுகத்தை கூறுவது. செட்டியார் இவை தவிர Silapadikaram the Earlier Tamil Epic (1950). Indian word is English Dictionary (1964), Ancient Tamil kings - their High ideals (ஆ.இ) ஆகிய சிறுபிரசுரங்களையும் வெளியிட்டுள்ளார். லெனின்கிராடு பல்கலைக்கழகத்தில் "உலகிற்குத் திருக்குறள் வழங்கும் செய்தி” என்ற தலைப்பில் இவர் பேசிய பேச்சு (1960) சோவியத் நாடு இதழில் வந்தது. இதற்கு ரஷ்ய மொழிபெயர்ப்பும் உண்டு .
முக்கியப் பொறுப்புகள்
- அண்ணாமலைக் கல்விக்குழு உறுப்பினர் (1938)
- ஆட்சிக்குழு உறுப்பினர் (1941)
- சென்னை அரசுப் பள்ளிகளின் குழு உறுப்பினர் (1942-45)
- சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் (1935-40)
- ஆந்திரா, மைசூர், திருவிதாங்கூர் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினர்
- 1946-ல் கலைச்சொல் உருவாக்க ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பிறகு கலைச்சொல் உருவாக்க குழுவின் தலைமை பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றார். ஆங்கில - தமிழ் சொற்களஞ்சியம் நூல் இவரது தலைமையில் வெளியிடப்பட்டது.
- சென்னையில் நடந்த இந்தியப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பிரதிநிதி (1948)
- 1958-ல் சட்ட மேலவைக்கு போட்டியிட்டு வென்றார். இரண்டு முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
- சாகித்ய அகதமி உறுப்பினர் (1958)
- மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
- 1960ஆம் ஆண்டு, உருஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார்.
- 1961-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உரையாற்றினார்.
- 1964-ல் பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியின் முதல்வர் (1965-1967)
விருதுகள்
- 1928-ல் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று "டாக்டர் ஜி. யு. போப் நினைவு" தங்கப் பதக்கத்தை வாங்கினார்.
- தருமபுரம் ஆதீனம், "செந்தமிழ்க் காவலர்" எனும் சிறப்புப் பட்டம் வழங்கியது.
- மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பி.டி. ராசன் இவரைப் பாராட்டிச் செந்தமிழ்க் காவலர் என்னும் பட்டம் கொடுத்தார் (1955).
இறுதிக்காலம்
செட்டியார் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதல்வராய் இருந்தபோது வாதநோயால் அவதிப்பட்டார்; பின் மலேரியா நோய் வந்தது. 1960-67 இல் உடல்நலம் தேறி வந்தபோது ஜனவரி 22, 1967-ல் மதுரை திருநகர் தளக்கர்குளம் என்ற இடத்தில் ஒரு பாழுங்கிணற்றில் உயிரற்ற பிணமாய் மிதந்துகிடந்தார். கொலையா, தற்கொலையா என்று சந்தேகப்பட்ட செய்தியும் பத்திரிகைகளில் வந்தன
நூல் பட்டியல்
- இந்திய சரித்திர மாலை (1930)
- கட்டுரைக் கொத்து (1933)
- காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (சிற்றிலக்கண நூல் – 1940)
- முன்பனிக்காலம் (இலக்கியக் கட்டுரைகள் – 1951)
- சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954)
- தமிழோசை (1956)
- தமிழ் காட்டும் உலகு (இலக்கியக் கட்டுரைகள் – 1957)
- வீட்டுத் திருமகள் (கட்டுரைகள் – 1958)
- மன்னுயிர்க்கன்பர் (ஆல்பர்ட் சுவைட்சர் – 1958)
- சிறுகதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர் – 1959)
- ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம் (தலைமைப் பதிப்பாசிரியர்)
- மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆயிரந்திரு நாம அர்ச்சனை (1967)
- இளங்கோவின் இன்கவி (சிலப்பதிகாரத் திறனாய்வுக் கட்டுரைகள் – 1972)
- செங்கோல் வேந்தர் (1977)
- தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977)
- ஒதெல்லோ (ஆங்கில நாடகத் தமிழ் மொழி பெயர்ப்பு – சாகித்ய அகாதெமிக்காக)
வரலாற்று நூல்கள்
- சரித்திர மாலை (1938)
- உழைப்பால் உயர்ந்த ஒருவர் (1952)
- பெரியார் மன்றோ (1945)
- அன்பர் (1955)
கட்டுரைகள்
- எனது மேல்நாட்டு அனுபவம் (தமிழ்நாடு ஞாயிறு மலர் (1955)
- மாஸ்கோ அனுபவம் (சோவியத் நாடு 1968),
- ராதா இதழின் பேட்டி (1365)
ஆங்கிலம்
- Silappadhikaram: The Earliest Tamil Epic (1950)
- Advanced Studies in Tamil Prosody (Doctoral thesis – 1942)
- An Introduction To Tamil Poetry (1958)
- Indian word is English Dictionary (1964)
- Ancient Tamil kings - their High ideals
உசாத்துணை
- அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
- ந. வேலுசாமி எழுதிய இந்திய இலக்கியச் சிற்பிகள்: அ. சிதம்பரநாதச் செட்டியார் (சாகித்ய அகாதெமி முதல் பதிப்பு – 2005)
- சிலிகன்ஷெல்ஃப் பதிவு
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.