அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி

From Tamil Wiki
Revision as of 00:20, 20 May 2022 by Thirumalai.p (talk | contribs) (முடிவு)

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (1941-2020) ரஷ்ய தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவர் தமிழின் சங்க நூல்களை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னோடி.

நன்றி - http
நன்றி-bbc.com
[http://muelangovan.blogspot.com/ ://muelangovan.blogspot.com/

]

பிறப்பு,கல்வி

இவர் ஏப்ரல் 27, 1941 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மிகையல் மற்றும் கெலன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் நத்தாலியா என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு தான்யா என்ற மகள் பிறந்தார்.

தனிவாழ்க்கை

இவர் 1965 ஆம் ஆண்டு மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்து பின்னர் அங்கேயே உயர் நிலைப்பட்டப்படிப்பையும் முடித்து,1973 ஆம் ஆண்டு விரிவுரையாளராக அங்கேயே பணியில் அமர்ந்தார் பின்னர் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வும் பெற்று பணியாற்றினார்.

இவர் சங்கத்தமிழ் பற்றி ஆய்வு செய்து அதேக்கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் இந்த ஆய்வை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.

இவர் 1979 ஆம் ஆண்டு இந்தியவிற்கு சென்று சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். மேலும் இவர் பேராசிரியர் சஞ்சீவ் அவர்களிடம் புறநானூறு கற்றார். பின்னர் இவர் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார்.

பின்னாளில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையின் தலைவராக பணியில் இருந்தார். மேலும் இவர் பத்திற்கும் மேற்ப்பட்ட பல்கழகங்களில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

பங்களிப்பு

இவர் லெனின் கிராட்டில் தமிழ் சொல்லிக்கொடுக்க ஒரு பள்ளியை உருவாக்கினார்.

இவர் தூயத்தமிழில் பேசவும், எழுதவும் பலரை பயிற்றுவித்தார் மேலும் பல ரஷ்யப்பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். இவர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார், இவற்றில் பல கட்டுரைகள் தமிழ் மொழி குறித்து எழுதியுள்ளார்.

இவர் 1979ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியில் தமிழ்ப் பாடல்கள் என்ற தலைப்பில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

இவர் 1987ஆம் ஆண்டில் தமிழ் இலக்கியம் ஒரு பார்வை என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார்.

இவர் 1989ஆம் ஆண்டு பழந்தமிழ் பாடல்களில் சடங்கு,புராண இலக்கிய வேர்கள் என்னும் இரு நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இவர் புறநானூற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து 2000 ஆம் ஆண்டில் அவர் எழுதிய நூல் தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பாகும் என்று பழ. நெடுமாறன் வரையறுக்கிறார்.

இவர் ரஷ்ய மொழியில் இயற்றிய நூல்கள்

  • தமிழ் இலக்கியம் ஒரு பார்வை
  • பனை ஒலையில் பாடல்கள்
  • பழந்தமிழ் இலக்கியங்களில் சடங்குகளும் தொல்புனைகதைகளும் (Ritual and Mythological Sources of the Early Tamil Poetry)

இவர் ரஷ்ய மொழியில் எழுதி வெளியிட்டுள்ள குறிப்பிடத்தகுந்த கட்டுரைகள்

  • பத்துப்பாட்டு
  • தமிழின் அகப்பொருள் பாடல்களின் அமைப்பு
  • பத்தினி வழிபாடு
  • சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம்
  • உலக இலக்கியங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம்
  • பாரதியின் தேசபக்திப் பாடல்கள்

இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட கட்டுரைகள்

  • சிலப்பதிகாரக் கதையும் அமைப்பும்
  • குறிஞ்சிப் பாட்டு
  • சங்க நெய்தல் பாடல்கள்
  • பழந்தமிழில் காஞ்சி
  • செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் நொச்சி
  • உழிஞைச் செய்திகள்

இவர் உலகெங்கிலும் பயணம் மேற்கொண்டு ஆய்வரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டில் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி உரையாற்றினார்.

இவர் தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், சிவத்தம்பி, வைரமுத்து மற்றும் பலருடன் நல்ல தொடர்பில் இருந்தார்.

விருது

இவருடைய பணியைப் பாராட்டி இவருக்குத் தெற்க்காசியக் கல்விச் சங்கம் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013இல் வழங்கியது.

மறைவு

இவர் நவம்பர் 18, 2020 ஆம் ஆண்டு, தனது 79 ஆம் வயதில் கொரோனாவினால் உயிரிழந்தார்.

உசாத்துணை

தமிழ் ஓசை

முனைவர் இளங்கோவன் பதிவு

பழ. நெடுமாறன் குறிப்பு