அரு.பெரியண்ணன்

From Tamil Wiki
Revision as of 00:00, 19 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|அரு.பெரியண்ணன் அரு.பெரியண்ணன் ( ) பொன்னி இதழின் பதிப்பாசிரியர். பாரதிதாசனின் நண்பர். பாரதிதாசன் படைப்புகளையும் திராவிட இயக்கநூல்களையும் வெளியிட்டவர் == ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அரு.பெரியண்ணன்

அரு.பெரியண்ணன் ( ) பொன்னி இதழின் பதிப்பாசிரியர். பாரதிதாசனின் நண்பர். பாரதிதாசன் படைப்புகளையும் திராவிட இயக்கநூல்களையும் வெளியிட்டவர்

பிறப்பு, கல்வி

அரு.பெரியண்ணன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். பிறந்த ஆண்டு 12.ஆகஸ்ட் 1925 .

அரசியல்

1941ல் பாரதிதாசன் செட்டிநாட்டுக்கு சொற்பொழிவுப்பயணமாக வந்தபோது அவரால் ஈர்க்கப்பட்டார். இவருடைய உறவினரான முருகு சுப்ரமணியன்னுடன் இணைந்து முத்தமிழ் நிலையம் என்னும் அமைப்பை உருவாக்கி திராவிட இயக்கக் கொள்கைகளை பரப்பினார்.

பதிப்புப் பணி

அரு.பெரியண்ணன் புதுக்கோட்டையில் செந்தமிழ்ப் பதிப்பகம் என்னும் பெயரில் அச்சகம் நடத்தினார். அதன் வழியாத் திராவிட இயக்க நூல்கள் பலவற்றை வெளியிட்டார். முருகு சுப்ரமணியன் 1947 - ல் பொன்னி இதழை தொடங்கியபோது அதன் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். 1953ல் முருகு சுப்ரமணியம் மலேசியா சென்ற பிறகு பொன்னி இதழை ஓராண்டுக்காலம் நடத்தினார்

உசாத்துணை

பொன்னி இதழாசிரியர்கள்- மு. இளங்கோவன்