அருண் மகிழ்நன்
From Tamil Wiki
அருண் மகிழ்நன் (பிறப்பு- 1945) சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாட்டாளர்.
அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு பதவிகளிலும் பொறுப்புகளிலும் குழுக்களிலும் செயலாற்றி, கலை, இலக்கியம், பொது விவகாரங்கள், ஊடகத் துறை போன்றவற்றில் நிபுணத்துவப் பங்களிப்பை வழங்கி வருபவர். சிங்கப்பூரில் ஊடகங்கள், சமூகப் பிரச்சினைகள், கலைகள் பற்றிய நூல்களின் ஆசிரியராகவும் இணையாசிரியராகவும் இருந்துள்ளார்.