being created

அருணன்

From Tamil Wiki
Revision as of 15:25, 25 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அருணோதயம் அருணன்

அருணன் (அருணாசலம்; அருணோதயம் அருணன்) (பிறப்பு: டிசம்பர் 18, 1924; இறப்பு: செப்டம்பர் 26. 2020) தமிழ் எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர். 1953-ல் ‘அருணோதயம்’ என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டார். ‘தென்றல்’ இதழைத் தொடங்கி நடத்தினார். பல நூல்களை எழுதினார். தனது பதிப்பகம் மூலம் பல பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளார்.

பிறப்பு, கல்வி

அருணன், தேவக்கோட்டையில், டிசம்பர் 18, 1924-ல், லெட்சுமணன் செட்டியார் - சீதை ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர்: அருணாசலம் தேவக்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

பள்ளி நண்பர் சின்ன அண்ணாமலை தலைமையில் சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். பணி தேடி சென்னைக்குச் சென்றார். மனைவி: கல்யாணி ஆச்சி. மகன்கள்: அரு. சோலையப்பன், அரு. லட்சுமணன், அரு. வெங்கடாசலம்.

இலக்கிய வாழ்க்கை

அருணன், ரூ.750 முதலீட்டில் நண்பர் குயிலனுடன் இணைந்து ‘தென்றல்’ என்ற இதழை ஆரம்பித்தார். இதன் முதல் இதழில் சோழன் நெடுமுடிக்கள்ளி பற்றி ‘பீலிவளை' என்ற கதையை கண்ணதாசன் எழுதினார். பொருளியல் பிரச்சனைகளால் அந்த இதழ் நின்று போனது. (பின்னர் அதே பெயரில் கண்ணதாசன் இதழ் ஆரம்பித்து நடத்தினார்) தொடர்ந்து ‘சினிமா ரசிகன்’, ‘கலை அரசு’, ‘நிழல்’, ‘தினச்செய்தி’, ‘தினசரி’, ‘தமிழ் முழக்கம்’,  ‘திரைக்கலை’ போன்ற இதழ்களில் ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். ‘அருணன்’ என்ற பெயரிலேயே இதழ் ஒன்றைத் தொடங்கிச் சிலகாலம் நடத்தினார். கதை, கட்டுரை, தொடர்களைப் பல இதழ்களில் எழுதினார்.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.