first review completed

அம்பை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "{{first review completed}}alt=அம்பை|thumb|அம்பை|link=https://littamilpedia.org/index.php/File:Ambai.jpeg{{Read English|Name of target article=Ambai|Title of target article=Ambai}} '''அம்பை ('''1944-) அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்...")
 
Line 11: Line 11:
அம்பையின் முதல் படைப்பு நந்திமலைச்சாரலிலே (1960) என்ற நாவல். இது சிறுவர்களுக்கான துப்பறியும் சாகச நாவல். குழந்தைகள் பத்திரிகையான "கண்ணன்" பத்திரிகையில் வெளியானது. பிறகு [https://littamilpedia.org/index.php/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D ஆனந்தவிகடன்] பத்திரிகையில் சில சிறுகதைகளை எழுதினார். அம்பையின் இரண்டாவது நாவலான அந்திமாலை கலைமகள் நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. இந்தச் சிறுகதைகளும் அந்திமாலை நாவலும் அன்று ஆணுக்கு உதவியாக இருப்பவளே லட்சியப் பெண் என்ற பிம்பத்தை ஒட்டியே அமைந்திருந்தன என்று அம்பை குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு 1967-இல் [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF கணையாழி] பத்திரிகையில் வெளியான [https://archive.org/details/orr-11902_Siragugal-Muriyum சிறகுகள் முறியும்] என்ற சிறுகதையே அவரது முதல் சிறுகதையாகக் அவரால் முன்வைக்கப்படுகிறது
அம்பையின் முதல் படைப்பு நந்திமலைச்சாரலிலே (1960) என்ற நாவல். இது சிறுவர்களுக்கான துப்பறியும் சாகச நாவல். குழந்தைகள் பத்திரிகையான "கண்ணன்" பத்திரிகையில் வெளியானது. பிறகு [https://littamilpedia.org/index.php/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D ஆனந்தவிகடன்] பத்திரிகையில் சில சிறுகதைகளை எழுதினார். அம்பையின் இரண்டாவது நாவலான அந்திமாலை கலைமகள் நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. இந்தச் சிறுகதைகளும் அந்திமாலை நாவலும் அன்று ஆணுக்கு உதவியாக இருப்பவளே லட்சியப் பெண் என்ற பிம்பத்தை ஒட்டியே அமைந்திருந்தன என்று அம்பை குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு 1967-இல் [https://littamilpedia.org/index.php/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF கணையாழி] பத்திரிகையில் வெளியான [https://archive.org/details/orr-11902_Siragugal-Muriyum சிறகுகள் முறியும்] என்ற சிறுகதையே அவரது முதல் சிறுகதையாகக் அவரால் முன்வைக்கப்படுகிறது


அம்பையின் சிறுகதைகள் அனேகமாக பெண்களின் பார்வையிலிருந்து எழுதப்படுபவை. ஆனால் அவை பிரச்சாரக் கதைகள் அல்ல.  பாரம்பரியமும் பண்பாடும் பெண்களை காலம் காலமாக எப்படி நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கி வந்திருக்கின்றன என்பதை மிக நுட்பமாக சுட்டிக் காட்டுகிறார். அவர் கதைகளில் வரும் நாயகிகள் இதைப் புரிந்து கொள்கிறார்கள். கையாலாகாத அழுகை இல்லை. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்கிறார்கள். பெண்களின் வாழ்க்கை ஏன் இப்படி சிக்கலாக இருக்கின்றன என்பதைப் பற்றி வாசகர்களை - பெண், ஆண் வாசகர்கள் அனைவரையும் - சிந்திக்க வைக்கிறார்.
அம்பையின் சிறுகதைகள் அனேகமாக பெண்களின் பார்வையிலிருந்து எழுதப்படுபவை. ஆனால் அவை பிரச்சாரக் கதைகள் அல்ல.  பாரம்பரியமும் பண்பாடும் பெண்களை காலம் காலமாக எப்படி நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கி வந்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். பெண்களின் வாழ்க்கையில் உள்ள சமூக ஆதிக்கம், கருத்தியல் ஆதிக்கத்தையே முதன்மையாக அம்பை பேசுபொருளாகக் கொண்டிருக்கிறார். தொடக்ககாலக் கதைகளில் மார்க்சியச் செல்வாக்கும் உண்டு. அண்மையில் துப்பறியும் கதைகளின் பாணியிலும் கதைகளை எழுதியிருக்கிறார்.  
 
அம்பையின் பல சிறுகதைகளை [https://archive.org/search.php?query=subject%3A%22%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%22 ஆர்க்கைவ்] தளத்திலும் [https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88 அழியாச்சுடர்கள்] தளத்திலும் படிக்கலாம்.
==ஆய்வுகள்==
==ஆய்வுகள்==
சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
Line 81: Line 79:
*http://tamilliterarygarden.com/awards/ambai
*http://tamilliterarygarden.com/awards/ambai
*https://www.hindutamil.in/news/supplements/penn-indru/131161-02.html<!--This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section-->
*https://www.hindutamil.in/news/supplements/penn-indru/131161-02.html<!--This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section-->
*https://archive.org/search.php?query=subject%3A%22%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%22
*https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/

Revision as of 12:47, 1 February 2022


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

அம்பை
அம்பை

To read the article in English: Ambai.


அம்பை (1944-) அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பிறப்பு, இளமை

அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. 1944-இல் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். பெங்களூரில் வளர்ந்தவர். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை (B.A.) பட்டம் பெற்றார். வரலாற்றில் முதுகலை (M.A.) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (அமெரிக்கவியல்) பெற்றார். பிறகு தமிழகத்தில் பள்ளி ஆசிரியராகவும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணி புரிந்தார்.

1976-இல் ஆவணப்பட இயக்குனர் விஷ்ணு மாத்துரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

அம்பையின் முதல் படைப்பு நந்திமலைச்சாரலிலே (1960) என்ற நாவல். இது சிறுவர்களுக்கான துப்பறியும் சாகச நாவல். குழந்தைகள் பத்திரிகையான "கண்ணன்" பத்திரிகையில் வெளியானது. பிறகு ஆனந்தவிகடன் பத்திரிகையில் சில சிறுகதைகளை எழுதினார். அம்பையின் இரண்டாவது நாவலான அந்திமாலை கலைமகள் நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. இந்தச் சிறுகதைகளும் அந்திமாலை நாவலும் அன்று ஆணுக்கு உதவியாக இருப்பவளே லட்சியப் பெண் என்ற பிம்பத்தை ஒட்டியே அமைந்திருந்தன என்று அம்பை குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு 1967-இல் கணையாழி பத்திரிகையில் வெளியான சிறகுகள் முறியும் என்ற சிறுகதையே அவரது முதல் சிறுகதையாகக் அவரால் முன்வைக்கப்படுகிறது

அம்பையின் சிறுகதைகள் அனேகமாக பெண்களின் பார்வையிலிருந்து எழுதப்படுபவை. ஆனால் அவை பிரச்சாரக் கதைகள் அல்ல. பாரம்பரியமும் பண்பாடும் பெண்களை காலம் காலமாக எப்படி நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கி வந்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். பெண்களின் வாழ்க்கையில் உள்ள சமூக ஆதிக்கம், கருத்தியல் ஆதிக்கத்தையே முதன்மையாக அம்பை பேசுபொருளாகக் கொண்டிருக்கிறார். தொடக்ககாலக் கதைகளில் மார்க்சியச் செல்வாக்கும் உண்டு. அண்மையில் துப்பறியும் கதைகளின் பாணியிலும் கதைகளை எழுதியிருக்கிறார்.

ஆய்வுகள்

சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.

சமூகப் பணிகள்

SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவியர்களில் ஒருவர். இன்றும் அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு பெண்களின் ஒலிப்பதிவுகள், வாய்மொழி வரலாறுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

இலக்கிய இடம்

அம்பையின் சிறகதைகளைப் பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின்மீது கவியும் துன்பங்களையும் தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.

வெகுஜனப் பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன. என்று விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார் *

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அம்மா ஒரு கொலை செய்தாள், கறுப்பு குதிரை சதுக்கம், ஆகிய சிறுகதைகளை தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் விமர்சகர் ஜெயமோகன் சேர்க்கிறார். விமர்சகர் எஸ். ராமகிருஷ்ணன் அம்மா ஒரு கொலை செய்தாள், காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைகளை தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார்.

பெண்கல்வி, பெண் விடுதலைக்கான குரல்கள் தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகின்றன. வை.மு.கோதைநாயகி அம்மாள் முதல் தொடர்ச்சியாக பெண் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களில் ஆர்.சூடாமணி முக்கியமானவர். அம்பை ஆர்.சூடாமணியை தன் இலக்கிய வழிகாட்டியாகவும், தன் இலக்கியத்தோழியாகவும் கருதுபவர். (மனதுக்கினியவள்,அம்பை)ஆனால் பெண்ணியக் கொள்கைகள் பற்றிய புரிதலுடன், உலகளாவிய வரலாற்று அணுகுமுறையுடன் பெண்விடுதலை பற்றி தமிழில் பேசியவர் அம்பை. களச்செயல்பாட்டளராகவும் பெண்விடுதலைக்காகப் பணியாற்றியவர். அவருடைய படைப்புக்களில் பெண்மைய நோக்கு ஒரு முன்சட்டகமாக அமைந்து கலைக்குறைபாட்டை உருவாக்குகிறது என்னும் விமர்சனம் விமர்ச்கர்களிடம் இருந்தாலும் அவருடைய படைப்புக்கள் ஆழமான உரையாடலை உருவாக்குபவை, அறிவார்ந்த நெருக்கடிகளை அளிப்பவை என்பதனால் அம்பை தமிழின் முக்கியமான முன்னோடி இலக்கியவாதியாகக் கருதப்படுகிறார்.

திரைப்படங்கள்

  • ‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
  • ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

விருதுகள்

  • கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது (2008)
  • 2021-க்கான சாகித்ய அகாடெமி விருது அம்பையின் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்புக்காக அளிக்கப்பட்டது.

படைப்புகள்

நாவல்கள்
  • அந்திமாலை (1966)
சிறுகதைத் தொகுப்புகள்
  • சிறகுகள் முறியும் (1976)
  • அம்மா ஒரு கொலை செய்தாள்
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
  • காட்டில் ஒரு மான் (2000)
  • சக்கர நாற்காலி
  • ஸஞ்சாரி
  • வற்றும் ஏரியின் மீன்கள் (2007)
  • ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்-சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள்
  • ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
  • சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சாகித்ய அகாடெமி விருது)
சிறார் நூல்கள்
  • நந்திமலைச்சாரலிலே (1960)
தொகுப்புகள்
  • பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு)
  • சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு)
  • செல்லம்மாள்-நினைவுக் குறிப்புகள் 1993
ஆய்வு நூல்
உடலெனும் வெளி-பெண்ணும் மொழியும் வெளிப்பாடும்
  • The Face behind the Mask: Women in Tamil Literature
  • Seven Seas & Seven Mountains series: (2 volumes)
  • Volume 1: The Singer and the Song – Conversations with Women Musicians
  • Volume 2: Mirrors and Gestures – Conversations with Women Dancers (ed.) The Unhurried City – Writings on Chennai.
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

மொழியாக்கங்கள்

ஸைபீரியப் பனியில் நடனக் காலனியுடன்-ஸான்ட்ரா கால்னியடே

அமைதியின் நறுமணம்- இரோம் ஷர்மிலா து (2021)

உசாத்துணை