under review

அமிர்தா ராஜகோபால்

From Tamil Wiki
Revision as of 20:59, 3 February 2024 by Tamizhkalai (talk | contribs)
அமிர்தா ராஜகோபால்

அமிர்தா ராஜகோபால் (பிறப்பு: பிப்ரவரி 11, 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர். இரு நாவல்கள் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

அமிர்தா ராஜகோபால் இலங்கை கொழும்பில் பிப்ரவரி 11, 1968-ல் அல்லிமுத்து, ராஜேஷ்வரி இணையருக்குப் பிறந்தார். கொழும்பு பம்பலப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

அமிர்தா ராஜகோபால் ராஜகோபாலை மணந்தார். ஆடை வடிவமைப்புத் தொழில் செய்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அமிர்தா ராஜகோபால் 'என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை', 'போகாதே என் சகியே' ஆகிய இரு நாவல்களை எழுதினார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'வாங்க பேசலாம்' என்னும் மாத இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவில் வெளிவந்தன. இலங்கைப் பத்திரிகையான தினகரனிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்தன.

நூல் பட்டியல்

நாவல்
  • என்னை காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை
  • போகாதே என் சகியே

உசாத்துணை


✅Finalised Page