அபிநவக் கதைகள்
From Tamil Wiki
முதலியாரின் அபிநவக் கதைகள் நூலில் கற்பலங்கார தனபாலன், கோமளம், சுப்பையர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்னும் ஆறு கதைகள் உள்ளன. இதில் சுப்பையர் கதை சுவையானது. சென்னையில் ஒரு சந்தை தீப்பற்றிய போது ஒருவன் காணாமல் போய்விட்டான். நெருப்பில் இறந்துவிட்டான் என்று நினைத்து அவனது உறவினர்கள் உத்தர கிரியை நடத்திவிட்டனர். இதன் பிறகு சில நாட்கள் கழித்து அந்த ஆள் திரும்பிவந்தான். இதனால் வந்த விளைவைக் கதை வர்ணிக்கிறது.