அன்பழகி கஜேந்திரா
From Tamil Wiki
Revision as of 11:17, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
அன்பழகி கஜேந்திரா (பிறப்பு: செப்டம்பர் 24, 1983) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
பிறப்பு, கல்வி
அன்பழகி கஜேந்திரா யாழ்ப்பாணம் வேலணையில் செப்டம்பர் 24, 1983-ல் விநாயகமூர்த்தி, இராஜேஸ்வரி இணையருக்குப் பிறந்தார். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்தார். போர்க்கால சூழலால் கல்வியைத் தொடர முடியாமல் ஆனார். படைத்துறைப் பள்ளியில் கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை
அன்பழகி கஜேந்திரா 2006-ல் கஜேந்திராவைத் திருமணம் செய்து கொண்டார். பல தொலைக்காட்சிக் கவிதை நிகழ்ச்சிகள், வானொலிக் கவிச்சமர், கவிதை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
இலங்கையில் வெளிவரும் பல பத்திரிகைகளில் அன்பழகி கஜேந்திராவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. 'உனக்குள் நீ' எனும் புதுக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
விருதுகள்
- கவிதாசாகரம் விருது
- கவிச்சரம் விருது
- கண்ணதாசன் விருது
நூல் பட்டியல்
கவிதைத் தொகுதி
- உனக்குள் நீ
- வெளிநாடு
உசாத்துணை
✅Finalised Page