அன்னை
From Tamil Wiki
அன்னை (ஸ்ரீ அன்னை; தி மதர்; மதர் மிர்ரா; மிர்ரா அல்ஃபாஸா: 1878-1973) பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தரின் யோக முறைகள் இவரைக் கவர்ந்ததால் இந்தியா வந்தார். ஸ்ரீ அரவிந்தர் வசித்த புதுச்சேரியிலேயே தங்கி அவரது ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை நிர்மாணித்தார். ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார். ‘செயலாற்றுவதே யோகம்’ என்பதைச் சாதகர்களுக்குப் போதித்தார். இறுதி வரை புதுச்சேரியிலேயே வாழ்ந்து நிறைவெய்தினார்.
பிறப்பு, கல்வி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.