அகிலன்
From Tamil Wiki
அகிலன் ( ) பி.வி.அகிலாண்டம். தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நாவலுக்காக ஞானபீடப் பரிசு பெற்றவர். பொதுவாசிப்புக்குரிய புகழ்பெற்ற நாவல்களை எழுதியிருக்கிறார்.இந்திய தேசியவாத அரசியல் சார்புகொண்டிருந்தார்.
பிறப்பு, கல்வி
அகிலனின் இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். 27 ஜூன் 1922 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்காளூரில் வைத்திலிங்கம்- அமிர்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். பெருங்காளூரிலேயே ஆரம்பக்கல்வி பயின்றார். கணக்கு அலுவலராக இருந்த அமிர்தலிங்கம் அகிலன் சிறுவனாக இருக்கும்போதே மறைந்தார்.
தனிவாழ்க்கை
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அகிலன் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து நிகழ்ச்சித்தயாரிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.