சி.சரவணகார்த்திகேயன்

From Tamil Wiki
Revision as of 16:02, 18 January 2022 by Jeyamohan (talk | contribs)

சி. சரவணகார்த்திகேயன் (13.8.1984) தமிழில் புனைகதைகளையும் கட்டுரைகளையும் எழுதிவரும் எழுத்தாளர். அறிவியல் அரசியல் சினிமா என வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரை நூல்களை எழுதுகிறார்.

பிறப்பு,கல்வி

சி.சரவணக் கார்த்திகேயன் கோவை சிங்காநல்லூரில் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் நாள் இரா. சின்னதுரை - சி. தெய்வாத்தாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். ஈரோடு பிரசாந்தி வித்யா பவன்பள்ளியில் ஆரம்பக்கல்வியும், சின்னியம்பாளையம் பிரசாந்தி வித்யா பவன் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும்  ஈரோடு , மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்தில் மேல்நிலைக்கல்வியும் முடித்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில்  கணிப்பொறியியல் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

பார்வதி யமுனாவை மார்ச் 9, 2008 ல் காதல் மணம் புரிந்தார். குழந்தைகள் ஞானி ,போதி. கணினிப்பொறியாளராக பெங்களூரில் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சி.சரவணக் கார்த்திகேயன் 13 வயதில் எழுத ஆரம்பித்து 2007ல் எழுத்துலகில் பிரவேசித்த‌வர். இதுவரை 27 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது முதல் நாவலான ’ஆப்பிளுக்கு முன்’ காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்டது. அந்தமான் தீவுகளின் கற்காலப் பழங்குடிகளின் வாழ்வையொட்டியது இவரது கன்னித்தீவு நாவல்.

குங்குமம் வார இதழ் நடத்திய வாசகர் கவிதைத் திருவிழாவில் இவரது ஒருத்தி நினைக்கையிலே.. என்பதை வைரமுத்து முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுத்தார். பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த‌ பரத்தை கூற்று (அகநாழிகை பதிப்பகம்) என்னும்150 சிறுகவிதைகளின் தொகுப்பை எழுத்தாளர் சாரு நிவேதிதா வெளியிட்டார். ஏழு பெண்பாற் பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் எழுதப்பட்ட தேவதை புராணம் (150 சிறுகவிதைகள்) தமிழ்பேப்பரில் தொடராகவும், பின் நூலாகவும் வந்தது. ரதி ரகசியம் என்ற பெயரில் காமத்துப்பால் குறள்களுக்குக் குறுங்கவிதை உரை நூல் எழுதினார்

இந்தியாவின் முதல் நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி‌ முழு விஞ்ஞான, வரலாற்றுத் தகவல்களுடன் இவர் எழுதிய சந்திரயான் என்ற‌ நூல் தொழில்நுட்பப் பிரிவில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதினைப் பெற்றது. அம்ருதா இதழில் 2011 நொபேல் விருதுகள் பற்றி எழுதிய‌ விரிவான கட்டுரைகளும், பிற கட்டுரைகளும் கிட்டத்தட்ட கடவுள் என்ற நூலாக‌ வெளியானது. குங்குமம் இதழில் பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்களின் வரலாற்றை ச்சீய் பக்கங்கள் தொடராக எழுதினார். அது வெட்கம் விட்டுப் பேசலாம் என்ற நூலாக வெளியாகி இருக்கிறது.

இந்திய ராக்கெட் இயலின் சரித்திரத்தை குங்குமம் இதழில் தொடராக எழுதினார் (ஆகாயம் கனவு அப்துல் கலாம்). பின் சூரியன் பதிப்பகம் மூலம் அது நூல் வடிவம் பெற்றது. 96 திரைப்படம் பற்றி ரசனை அடிப்படையில் 96: தனிப்பெருங்காதல் என்ற‌ முழு நூல் ஒன்றை எழுதியுள்ளார். 2019ல் இந்திய‌ அரசியல் சாசனத்தை முன்வைத்து எழுதிய கட்டுரைகள் இந்தி தேசிய மொழியா? என்ற தொகுப்பாகவும் சமூக, அரசியல் நிகழ்வுகளை ஒட்டிய கட்டுரைகள் அநீதிக்கதைகள் என்ற தொகுப்பாகவும் வெளிவந்தன. இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு Girls, Goddesses & Gentlewomen என்ற மின்னூலாக வெளியாகியுள்ளது (2020).

ஆரம்ப காலத்தில் புனைவில் சுஜாதாவும் கவிதையில் வைரமுத்துவும் பலமான பாதிப்பு செலுத்தியதாகவும். பிறகு சில காலத்துக்கு சாரு நிவேதிதா, மகுடேசுவரன் மற்றும் மனுஷ்ய புத்திரனின் சாயல் இருந்ததென்றும் கூறுகிறார்.

இதழியல்

தமிழ் என்ற மின்னிதழ் நடத்தி வருகிறார். இதுவரை ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன் ஆகியோரை விரிவான, ஆழமான‌ நேர்காணல் செய்து அதில் வெளியிட்டார். அவை மும்மூர்த்திகள் என்ற தொகுப்பாக‌ வெளிவந்துள்ளது. கலைஞரின் இலக்கிய‌ப் பங்களிப்புகளை முன்வைத்து ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார். 

நூல்பட்டியல்

சிறுகதைத்தொகுதிகள்
  • ஜி (தமிழினி)
  • கிருமி (உயிர்மை)
  • தான்தோன்றி (அரூ)
  • பெட்டை (தினமணி கதிர்)
  • நீதிக்கதை
  • நான்காம் தோட்டா (ஆனந்த விகடன்)
  • மயிரு (குமுதம்)
  • ஒரே ரத்தம்
  • இறுதி இரவு
  • E=mc2 (தமிழ்பேப்பர்)

கட்டுரைகள்

  • சேர நன்னாட்டிளம் பெண்கள்
  • பொச்சு (விகடன் தடம்)
  • கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி (உயிர்மை)
  • இந்தி நம் தேசிய மொழியா? (உயிர்மை) [அரசியல்]
  • எரிநட்சத்திரம் (குங்குமம்)
  • மீயழகி - 2021 [பெண்கள்]
  • ஜோல்னா பை - 2021 [இலக்கியம்]
  • மக்களின் அபின் - 2021 [அரசியல்]
  • கற்பதுவே கேட்பதுவே கருதுவதே - 2021 [ரசனை]
  • அம்பேத்கர் பெரியார் அயோத்திதாசர் - 2021 [அரசியல்]
  • ஒரு கோப்பை பிரபஞ்சம் - 2019 [ரசனை]
  • அநீதிக் கதைகள் - 2019 [சமூகம்]
  • ஐ லவ் யூ மிஷ்கின் - 2019 [திரைப்படம்]
  • கிட்டத்தட்ட கடவுள் - 2013 [அறிவியல்]
  • மும்மூர்த்திகள் - 2019 [நேர்காணல்]
  • 96: தனிப்பெருங்காதல் - 2018 [திரைப்படம்]
  • ஃபீனிக்ஸ் கனவுகள் [ஆகாயம் கனவு அப்துல் கலாம்] - 2016 [அறிவியல்]
  • ச்சீய் பக்கங்கள் [வெட்கம் விட்டுப் பேசலாம்] - 2014 [வரலாறு]
  • குஜராத் 2002 கலவரம் - 2014 [வரலாறு]
  • சந்திரயான் - 2009 [அறிவியல்]

கவிதைகள்

  • ஒருத்தி நினைக்கையிலே (குங்குமம்)
  • முதல் நரை (ஆனந்த விகடன்)
  • இன்ன பிற‌
  • ரதி ரகசியம் - 2019 [உரை]
  • தேவதை புராணம் - 2012 [காதல்]
  • பரத்தை கூற்று - 2010 [சமூகம்]

புனைவு

  • கறுப்பு சிவப்பு வெளுப்பு - 2021 [குறுநாவல்] - மின்னூல்
  • 69 - 2021 [நுண்கதை]
  • கிருமி - 2021 [சிறுகதை]
  • கன்னித்தீவு - 2019 [நாவல்]
  • மியாவ் - 2018 [சிறுகதை]
  • ஆப்பிளுக்கு முன் - 2017 [நாவல்]
  • இறுதி இரவு - 2016 [சிறுகதை]

கட்டுரை - ஆங்கிலம்

  • Girls, Goddesses & Gentlewomen - 2020 [Experience] - Kindle E-Book

பிற முயற்சிகள்

  • தமிழ் (காலாண்டு மின்னிதழ்)
  • மு.க.நூல் (கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' - சுருக்கம்) - Facebook Page
  • அனுநானூறு (அனு ஸிதாரா உபாசனைக் கவிதைகள்)
  • இலவச‌ மின்னூல்கள்
  • வானவில் - 2018 ['ச்சீய் பக்கங்கள்' - LGBT பற்றிய‌ பகுதிகள்]
  • ச்சீய்... - 2015 ['ச்சீய் பக்கங்கள்' - நூலாக்கம் பெறாத பகுதிகள்]

அரசியல் செயல்பாடுகள்

நேரடிக் கள அரசியல் செயல்பாடுகள் ஏதுமில்லை இடதுசாரிகளோடு இணக்கம் உண்டு

2013ல் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தீவிர பாஜக எதிர்ப்பு அரசியலை எழுத்துக்களில் (கட்டுரைகள், புத்தகங்கள், ஃபேஸ்புக் / ட்விட்டர் பதிவுகள்) தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்துத்துவ, ஃபாசிஸ எதிர்ப்புதான் அடிப்படை. காந்தி மீது பெரிய மயக்கம் உண்டு. சமத்துவச் சமூகத்துக்காக காந்தி, அம்பேத்கர், பெரியாரைக் கைகொண்டு எழுதுகிறார். திமுக அனுதாபி. கலைஞர் மீது பிரியம். இப்போது திருமாவளவன் மீது நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் சமயங்களில் மட்டும் திமுகவை ஆதரித்து எழுதுகிறார், மற்ற சமயங்களில் அதன் மீதான ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சிக்கிறார். தமிழ் இன வெறி அரசியலை எதிர்க்கிரார். கடவுள் நம்பிக்கை கிடையாது.

விருதுகள்

  • உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருது [இணையம்] - 2017
  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூல் பரிசு [தொழில்நுட்பம்] - 2009
  • குங்குமம் இதழில் கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுத்த‌ முத்திரைக் கவிதை - 2007
  • திருப்பூர் இலக்கிய விருது [படைப்பிலக்கியம்] - 2019
  • பிரதிலிபி - அகம் நடத்திய‌ ‘ஞயம் பட வரை’ கட்டுரைப் போட்டி [முதல் பரிசு] - 2016
  • தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி [ஆறுதல் பரிசு] - 2018
  • அந்திமழை இதழ் - நம்பிக்கை நட்சத்திரம் [பன்முகத் திறமை] - 2015

இணைப்புகள்

  • புத்தகங்கள் (writercsk.com)
  • சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’ | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • கன்னித்தீவு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • சி.சரவணகார்த்திகேயன், Author at தமிழினி (tamizhini.in)
  • Amazon.com: C.Saravanakarthikeyan: Books, Biography, Blog, Audiobooks, Kindle
  • கமல் ஹாசனின் அரசியல்: Kamal Haasanin Arasiyal (Tamil Edition) eBook : C. Saravanakarthikeyan,
  • சி.சரவணகார்த்திகேயன்: Amazon.in: Kindle Store
  • இறுதி இரவு: Irudhi Iravu (Tamil Edition) eBook : C. Saravanakarthikeyan, சி. சரவணகார்த்திகேயன்: Amazon.in: Kindle Store
  • பரத்தை கூற்று : விழா நன்றியுரை (writercsk.com)
  • சரவணகார்த்திகேயன் சி (vikatan.com)
  • பொன்னி: தங்கத் தாண்டவம் - சி. சரவணகார்த்திகேயன் - தமிழினி (tamizhini.in)
  • மும்மூர்த்திகள் - சி.சரவணகார்த்தியேன் - கிழக்கு பதிப்பகம் | panuval.com
  • க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன் - Uyirmmai
  • நூல்நோக்கு: எல்லைகளற்ற கதைகள் | book review - hindutamil.in
  • ஸ்டாலின், பனை ஓலையை பானை ஓலை என்று உச்சரித்தது நல்லதே!’ ஹலோ... ப்ளூடிக் நண்பா! | Stalin's mispronunciation gives a boost to Thirumavalavan's campaign - Hello Blue Tick Nanba (vikatan.com)
  • விசை படைப்பிலக்கியத் திட்டம்: மர்மக் கதை எழுதும் உத்திகள் , விசை பயிலரங்கு செய்திகள் - தமிழ் முரசு Key Trainer News in Tamil, Tamil Murasu
  • அமேசான் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி 4-வது ஆண்டாக அறிவிப்பு! (yourstory.com)
  • உயிர்மை பதிப்பகத்தில்  வெளியான நூல்களை வாங்க: Uyirmmai Books
  • பிற பதிப்பகங்களில் வெளியான‌ நூல்களை வாங்க‌: Common Folks
  • கிண்டில் மின்னூல்களை வாங்க‌: Amazon India