சந்திரா தங்கராஜ்
From Tamil Wiki
சந்திரா தங்கராஜ் எழுத்தாளர் கவிஞர், திரைப்பட இயக்குனர். சோளம் கதைத்தொகுப்பிற்காக 2022-ன் கலைஞர் பொற்கிழி விருதைப் பெற்றவர்.
பிறப்பு,கல்வி
சந்திரா தங்கராஜ், தேனி மாவட்டத்திலுள்ள கூடலூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
சந்திரா ஆறாம்திணை, ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியனார். இவர், பின்பு சினிமாத் துறையில் பணிபுரிந்து தற்போது“கள்ளன்” என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
விருதுகள், பரிசுகள்
- புதுமைபித்தன் நினைவுச் சிறுகதை பரிசு
- சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் விருது,
- சுந்தர ராமசாமி விருது (நெய்தல் அமைப்பு),
- சிகரம் தொட்ட பெண்கள் விருது (விஜய் டிவியின் இலக்கியத்திற்கான விருது)
படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
“பூனைகள் இல்லாத வீடு”,
“காட்டின் பெருங்கனவு”,
“அழகம்மா”
கவிதைத் தொகுப்புகள்
நீங்கிச் செல்லும் பேரன்பு,
வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்
மிளகு
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.