being created

அருணாசல புராணம்

From Tamil Wiki
Revision as of 22:26, 29 December 2022 by Jayashree (talk | contribs)

அருணாசல புராணம் திருவண்ணாமலையில் கோவில் கொண்ட சிவனைப் பாடும் நூல். 16-ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலரால் இயற்றப்பட்டது. தற்போது அந்தப் புராணத்தின் மூலமும் உரையும் கொண்ட ஓலைச்சுவடி பிரதிகள் கிடைத்துள்ளன.

ஆசிரியர்

அருணாசல புராணத்தை இயற்றியவர் எல்லப்ப நாவலர். சைவ இலக்கியங்களை இயற்றியதால் சைவ எல்லப்ப நாவலர் எனப்பட்டார். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூல் அமைப்பு

காப்பு

வியாசரால் இயற்றப்பட்ட ஸ்காந்த புராணத்தின் ருத்திர சம்ஹிதையில் உள்ள அருணாசல சரித்திரத்தை தமிழில் இயற்றியதாக காப்புச் செய்யுளிலிருந்து அறியலாம்.

மிக்க வேதவியாசர் விளம்பிய

விக்க தைக்கியை யின்றருள் செய்திட

முக்கள் வெற்பினை மும்மத வாரியை

கைக்களிற்றினைக் கைதொழுதேத்துவாம்

சருக்கங்கள்
  • திருநகரச் சருக்கம்
  • திருமலைச் சருக்கம்
  • திருவவதாரச் சருக்கம்
  • திருக்கண் புதந்த சருக்கம்
  • திருவவதாரச் சருக்கம்
  • இடப்பாகம் பெற்ற சருக்கம்
  • வச்சிராங்கதபாண் சருக்கம்
  • வல்லாளமகராஜ சருக்கம்
  • தீர்த்தச் சருக்கம்
  • திருமலை வலம்புரிச்சருக்கம்
  • ஆதித்தச் சருக்கம்
  • பிரதத்தராசன் சருக்கம்
  • பாவந்தீர்த்த சருக்கம்
  • புளகாதிபச் சருக்கம்
  • பாவந்தீர்த்தச் சருக்கம்
அருணாசலத்தின் பெருமை

நந்திதேவர் கூறிய திருவாரூர், சிதம்பரம் , காசி, காஞ்சிபுரம், ஸ்ரீசைலம், காளஸ்திரி, மதுரை , திருக்கேதாரம்,விரிஞ்சிபுரம்,விருத்தாச்சலம், திருவானைக்காவல், கும்பகோணம், திருவிடைமருதூர்,மற்றும் கங்கை நதி உள்ளிட்டவற்றின் சிறப்பை கேட்டறிந்த சனகாதி முனிவர்களும் மார்க்கண்டேயரும் நந்தி தேவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.

சத்தபுரி என்னும் 7 நகரங்கள் அயோத்தி,மதுரை,மாயாபுரி,காசி,காஞ்சி,அவந்தி,துவாரகை இவை ஒரு தட்டிலும் அருணாசலத்தை மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்தபோது அருணாசலம் அதிக கனதியாக இருந்தது

இதற்கு முத்திநகரம்,ஞானநகரம்,தலேச்சுரம்,சுத்தநகரம்,தென்கயிலாயம் என்னும் பெயர்கள் உண்டு 

சத்தபுரி ஏழு முதல் எடுத்து தலம் யாவும் ஒரு தட்டும் ஒரு தட்டு அதனிலே

அத் தலமும் இட்டு எதிர் நிறுக்க அவைகட்கு அதிகமானது ஒளிர் அந்த நகரம்

முத்திநகர் என்று பெயர் ஞானநகர் என்று பெயர் முத்தி அதிலேச்சுரம் எனும்

சுத்தநகர் என்று பெயர் தென்கயிலை என்று பெயர் சோணகிரி என்று பெயரே   

ஆகாயம் முதலானவை என்று உளதோ அன்று முதலே இது உள்ளது. இது அழிவு இல்லாதது    

ஒன்று உளது பூமிதனில் இன்று புதிதன்று உலகு முப்பரும் உயர்ந்த வெளியும்

என்று உளது அந்நாள் உளது வேத முடி மீதினில் இருப்பது அகலாமல் அதில் ஓர்

குன்றுதல் இல்லாத ஒரு வெற்பு உளது புண்டரிக கோளகையும் ஊடுருவியே

நின்று உளது தென் திசையில் என்றும் அழியாது நெடுநீர்  உலகு வாழ்வு பெறவே .

ஆரிடம்,இராக்கதம் ,அசுரம் ,தேவதத்தர்,மானிடம் ,சம்பு  என்று நாம் இலிங்கங்களுக்குப் பெயர் சூட்டியுள்ளோம். ஆனால் இங்கு மலையே இலிங்கமாக உள்ளது    29

முதல் கிருத யுகத்தில் செங்கண் நிறம் ,திரேத யுகத்தில் மணி நிறம், துவாபர யுகத்தில் பொன் நிறம்,கலி யுகத்தில் கல் மலை என இந்த மலை விளங்கிற்று 











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.