துறையூர் ஓடைகிழார்
From Tamil Wiki
Revision as of 19:31, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
துறையூர் ஓடைகிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
காவிரி ஆற்றின் கரையில் அமைந்த திருச்சி துறையூரில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
புறநானூற்றின் 136-ஆவது பாடல் இவர் பாடியது. இப்பாடலில் பொதிகை மலைச் சாரலைச் சார்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் வள்ளலைச் சிறப்பித்துப் பாடினார்.
பாடல் நடை
- புறநானூறு: 136
ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்,
எனக் கருதிப், பெயர் ஏத்தி,
வா யாரநின் இசை நம்பிச்,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; 20
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென
அனைத் துரைத்தனன் யான்ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்!
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- தமிழ்ச்சுரங்கம்-புறநானூறு 136
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.