பேரறிஞர் அண்ணா விருது
From Tamil Wiki
பேரறிஞர் அண்ணா விருது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.
பேரறிஞர் அண்ணா விருது
மேனாள் முதல்வராக இருந்த சி.என். அண்ணாத்துரையின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு 2006 முதல் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
பேரறிஞர் அண்ணா விருது பெற்றோர் (2021 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2006 | ஆர்.எம். வீரப்பன் |
2 | 2007 | சாரதா நம்பி ஆரூரன் |
3 | 2008 | அ. மறைமலையான் |
4 | 2009 | முனைவர் ஔவை நடராசன் |
5 | 2010 | து. ரவிக்குமார் |
6 | 2011 | இரா.செழியன் |
7 | 2012 | கே.ஆர்.பி.மணிமொழியன் |
8 | 2013 | பண்ருட்டி ச. ராமச்சந்திரன் |
9 | 2014 | பேராசிரியர் திருமதி கஸ்தூரி ராஜா |
10 | 2015 | பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா |
11 | 2016 | கவிஞர் கூரம் மு. துரை |
12 | 2017 | அ. சுப்ரமணியன் |
13 | 2018 | பேராசிரியர் மு. அய்க்கண் |
14 | 2019 | முனைவர் கோ.சமரசம் |
15 | 2020 | அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன் |
16 | 2021 | நாஞ்சில் சம்பத் |
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.