வெற்றி வேலர்
From Tamil Wiki
Revision as of 22:25, 21 December 2022 by Tamizhkalai (talk | contribs)
வெற்றி வேலர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் சாவகச் சேரியில் மீசாலையில் மாப்பாண முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். இருபாலை நெல்லைநாத முதலியார் இவரின் நண்பர். இலக்கண இலக்கியங்கள் கற்று, தமிழில் புலமை பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
வெற்றி வேலர் கவிதைகள் எழுதினார். வன்னியிலுள்ள செல்வர் ஒருவர் மீதும், மல்விற்கோவின் மீதும் இரு குறவஞ்சிகள் பாடினார்.
நூல் பட்டியல்
- மல்விற்கோ குறவஞ்சி
- வன்னியிலுள்ள செல்வர் ஒருவர் மீது பாடிய குறவஞ்சி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- வெற்றிவேலர்: தமிழ் இணைய கல்விக் கழகம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.