under review

வைத்தியநாதச் செட்டியார்

From Tamil Wiki

வைத்தியநாதச் செட்டியார் (1753-1844) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வைத்தியநாதச் செட்டியார் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அரிகரபுத்திரச் செட்டியாரின் மகனாக 1753இல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். நெல்லியோடைத் தேவிமீது பக்தி கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

வைத்தியநாதச் செட்டியார் கவிதைகள் எழுதினார். நெல்லியோடைத் தேவிமீது தனிப் பாக்கள் பலவற்றை இயற்றினார். பிள்ளைக்கவி என்ற பிரபந்தம் இயற்றினார்.

மறைவு

வைத்தியநாதச் செட்டியார் 1844இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • பிள்ளைக்கவி

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.