வி. கந்தையா
From Tamil Wiki
வி. கந்தையா (ஜூலை 29, 1920-) ஈழத்து தமிழ்ப்புலவர், பண்டிதர்.
வாழ்க்கைக் குறிப்பு
க. வினாசித்தம்பி இலங்கை கிழக்கு மாகாணம் மண்டூரில் வினாசித்தம்பி, சின்னாத்தை அம்மைக்கு மகனாக ஜூலை 29, 1920-ல் பிறந்தார். வ. பத்தக்குட்டி உபாத்தியார், ஏ. பெரியதம்பிப்பிள்ளை, குஞ்சித்தம்பி உபாத்தியாயர் ஆகியோரிடம் கல்வி பயின்றார்.
பட்டங்கள்
- யாழ்ப்பாணத்து ஆரிய பாஷா அபிவிருத்திச் சங்கப் பண்டிதர் பட்டம் (1943)
- மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் (1944)
- இலங்கைப் பல்கலைக்கழகத்தி்ன் தமிழ் வித்துவான் பட்டம் (1952)
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.ஓ.எல். (B.O.L) பட்டம் (1954)
இலக்கிய வாழ்க்கை
க. வினாசித்தம்பி தனிப்பாடல்கள் பல பாடினார். மட்டக்களப்புத் தமிழகம், கட்டுரையியல் ஆகிய நூல்களை எழுதினார்.
நூல் பட்டியல்
- மட்டக்களப்புத் தமிழகம்
- கட்டுரையியல்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:கந்தையா, வினாசித்தம்பி: noolaham
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.