வே. சம்பந்தப் புலவர்
From Tamil Wiki
வே. சம்பந்தப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சம்பந்தப் புலவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் வேலாயுத முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். நல்லூர் ஆறுமுக நாவலருடன் நட்பு கொண்டிருந்தார். இருபாலைச் சேனாதிராய முதலியார், சரவண முத்துப்புலவரிடமும் இலக்கண, இலக்கியங்கள் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
வே. சம்பந்தப் புலவர் கதிர்காமசுவாமி மேல் கீர்த்தனைகள் பல பாடியுள்ளார். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரும், புன்னலைக்கட்டுவன் செந்திநாதையரும் இவருடைய மாணவர்கள்.
நூல் பட்டியல்
- கதிர்காமசுவாமி கீர்த்தனைகள்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:சம்பந்தப்புலவர், வேலாயுத முதலியார்: noolaham
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.