கலைச்செல்வி (இதழ்)
கலைச்செல்வி ( ) இலங்கையில் இருந்து வெளியான இலக்கிய இதழ்.
தொடக்கம்
கலைச்செல்வி (சிற்பி (சிவசரவணபவன்) ஆசிரியராக 1958 ஆடி மாதத்தில்ருந்து வெளியானது
1958 முதல் 1966 வரையாக 8 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 70 இதழ்கள்
லைச்செல்வி இதழின் ஆரம்பத்தில் இணை ஆசிரியர்களாக தமிழ்வேள், சிற்பி ஆகியோர் இருந்திருக்கின்றனர். துணை ஆசிரியர்களாக தமிழ்ச் செல்வன், ஈழத்துச் சோமு இருந்திருக்கின்றனர். இடையில் கெளரவ ஆசிரியர்களாக தமிழ்வேள், சிற்பி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் இருந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஆசிரியராகச் சிற்பியும், துணை ஆசிரியராக மு.கனகராசனும், கெளரவ ஆசிரியராக இ.வைத்தியலிங்கமும் இருந்திருக்கின்றார்கள். முதல் இதழில் கலைச்செல்வியைத் தமிழ் இலக்கிய மன்றம் (கந்தரோடை, சுன்னாகம்) வெளியிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் பாலன் வெளியீடு (மார்கழி 1962, கார்த்திகை 1962) என்றும் அறிவிக்கப்பட்டு கலைச்செல்வி வெளியாகியுள்ளது. அக்காலகட்டத்தில் செட்டிகுளம் பகுதியிலிருந்து கலைச்செல்வி வெளியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நின்றுவிட்ட ஈழதேவி இதழின் நீட்சியாக
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும். தமிழனின் மொழி,கலை,கலாச்சாரம் ஆகியவற்றிற்கு , அவற்றின் தொன்மை மணம் குன்றாது புதுமை மெருகேற்ற வேண்டும். இவைதான் 'கலைச்செல்வி;யின் நோக்கங்கள். '
டொமினிக் ஜீவா, பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி (அப்பொழுது அவர்கள் பட்டதாரிகள்) போன்றோரின் படைப்புகள் வெளியாகியுள்ளன. கூடவே எஸ்.பொன்னுத்துரை , மு.தளையசிங்கம் போன்றவர்களின் படைப்புகள் வெளியாகியுள்ளன.
திரைவிருந்து, சினிமா ரேஸ்) வெளிவந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது. சினிமா நடிகர்களுடனான நேர்காணல்கள், நடிகர், நடிகைகள் பற்றிய செய்தித்துணுக்குகள்
மு.தளையசிங்கத்தின் முக்கிய சிறுகதைகளிலொன்றான 'புதுயுகம் பிறக்கிறது' கலைச்செல்வியின் தீபாவளி மலரில் (1962) வெளிவந்துள்ளது
கலைச்செல்வி வவுனியாவில் அது நடத்திய கலைவிழாவினையொட்டி (1962) சிறுகதைப்போட்டியை குறிப்பிடலாம். முதல் மூன்று பரிசுகளை முறையே செம்பியன் செல்வன் ( 'இதயக்குமுறல்'), யோ.பெனடிக்ற் பாலசெம்பியன் செல்வன் ( 'இதயக்குமுறல்'), யோ.பெனடிக்ற் பாலன் ('மெழுகு வர்த்தி') , எம்.எம்.மக்கீன் ('ரிவொலூஷன்') பெற்றன.
லைச்செல்வியின் இன்னுமொரு முக்கியமான பங்களிப்பு அது தமிழ் நாவல் துறைக்கு கொடுத்த முக்கியத்துவம். உதயணனின் 'இதயவானிலே', 'மனப்பாறை', சிற்பியின் 'உனக்காகக் கண்ணே', 'அன்பின் குரல்', 'சிந்தனைக் கண்ணீர்', செம்பியனின் செல்வனின் 'கர்ப்பக்கிருகம்', அகிலனின் 'சந்திப்பு' என நாவல்கள் பல தொடர்களாக வெளிவந்துள்ளன. செ.யோகநாதனின் வரலாற்றுக் குறுநாவலான 'மலர்ந்தது நெடுநிலா'வை
து நடத்திய 1000 ரூபா நாவல் போட்டி முக்கியமானது. முதற்பரிசு ரூபா 500 பெற்ற நாவல் மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு', இரண்டாம் பரிசான ரூபா 300 பெற்ற நாவல் மு.கந்தப்பு (மன்னவன்) எழுதிய 'காலடியில்', மூன்றாம் பரிசு ரூபா 200 பெற்ற நாவல் செ.யோகநாதனின் 'ஞாயிறும் எழுகிறது'
மஹாகாகவி , சாலை இளைந்திரையன், தில்லைச்சிவன், யாழ்வாணன், திமிலைத்துமிலன், முருகையன், நீலாவணன், அம்பி, ச.வே.பஞ்சாட்சரம், பா.சத்தியசீலன் , கல்வயல் வே.குமாரசாமி என்று பலரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.
முற்போக்கிலக்கியம் பற்றிக் கா,சிவத்தம்பி (கார்த்திகை 1962, தீபாவளி மலர்) அவர்கள் ஆரம்பித்து வைக்க மு.தளையசிங்கம் (மார்கழி 1962, தை 1963) , நவாலியூர் சோ.நடராசன் (பங்குனி 1963) ஆகியோர் தொடர்ந்து தமது எதிர்வினைகளை முன் வைத்தனர். இத்தர்க்கம் இலங்கைத் தமிழ் ஊடகச்சூழ
? வழக்கமான தீபாவளி மலர்கள், பொங்கல் மலர்களுடன் வவுனியாக் கலைவிழா மலர் (ஆவணி 1962), ஆண்டு மலர் (ஆகஸ்ட் 1959), மகளிர் மலர் (ஆவணி 1960) வளரும் எழுத்தாளர் மலர் (சித்திரை 1959) என்று பல தரமான இலக்கிய மலர்களைக் கலைச்செல்வி வெளியிட்டுள்ளது