under review

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

From Tamil Wiki
Revision as of 13:47, 4 December 2022 by Logamadevi (talk | contribs)

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வெண்ணாகனார் மதுரையில் கொல்லர் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். இரும்புத்தொழில் செய்வோரைக் கொல்லர் என்று அழைப்பர்.

இலக்கிய வாழ்க்கை

நற்றிணையில் 285-வது பாடலை வெண்ணாகனார் பாடினார். குறிஞ்சித்திணையில் தோழி கூற்றாக இப்பாடல் உள்ளது."தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, அம்ப லும் அலரும் ஆயிற்று" என்ற துறையில் வந்தது. "கானவன் தன் வில்லை வளைத்து வலிய அம்பை முட்பன்றியின் நெஞ்சில் பாயுமாறு ஏவிக்கொன்று கொண்டு வந்த மகிழ்ச்சியோடு தன் வீட்டில் வாழும் நாய் தன் பக்கத்தில் நின்று வால் குழைத்து ஆட காட்டின் நடுவே கால் நட்டுக் கட்டிய குடிசைக்குச் செல்வன்" என்ற காட்டுவாழ்க்கையை வெண்ணாகனார் இப்பாடலின் வழி சித்தரித்துள்ளார்.

பாடல் நடை

  • நற்றிணை 285

அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும்- உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி- தோழி!- என்றும்,
அயலோர் அம்பலின் அகலான்,
பகலின் வரூஉம், எறி புனத்தானே.

உசாத்துணை

} ‎


✅Finalised Page