மூங்கில் பூக்கள்
மூங்கில் பூக்கள் ( ) வாசந்தி எழுதிய நாவல். வடகிழக்கு மாநிலமான மிஸோரத்தின் பின்னணியில் அங்குள்ள இனப்பிரச்சினையை இணைத்துக்கொண்டு எழுதப்பட்டது.
எழுத்து, வெளியீடு
கதைச்சுருக்கம்
மிஸோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண்ணான ஷீலா ராணுவ அதிகாரி ராஜீவை காதலிக்கிறாள். அவளுடைய வகுப்பில் பிரிவினைவாத தலைவர் லால் கங்காவின் மகன் சுங்கா படிக்க வருகிறான்.சுங்கா கெட்டவன் என அறியப்பட்டாலும் நுண்ணுணர்வும் அழகுணர்வும் கொண்டவன். அவனுக்கும் ஷீலாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. ராஜீவ் பெண்பித்தன் என்பதை சுங்கா ஷீலாவிடம் சொல்ல அவன் இந்திய எதிரி என்பதனால் அப்படிச் சொல்கிறான் என ராஜீவ் சொல்கிறான். சுங்காவை ராஜீவ் கொல்கிறான். ஷீலா அங்கிருந்து தப்பிக்கிறாள். மிஸோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமாநம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால் கங்காதான் என்று தெரிய வருகிறது.
திரைப்படம்
இக்கதை மலையாளத்தில் பி.பத்மராஜன் இயக்கத்தில் கூடெவிடே என்னும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.