being created

நாரா. நாச்சியப்பன்

From Tamil Wiki
Revision as of 20:50, 25 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நாரா. நாச்சியப்பன்

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பிறப்பு: ஜூலை 13, 1927; இறப்பு: 2000த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளையும், சிறார்களுக்கான பல நூல்களையும் எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

பிறப்பு, கல்வி

நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார் - அன்னபூரணி ஆச்சி இணையருக்கு, ஜூலை 13, 1927-ல் பிறந்தார். குடும்ப வணிகம் காரணமாக தந்தை பர்மாவில் வசித்தார். நாச்சியப்பன் பர்மாவில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பயின்றார். திருச்சி தேசியக்கல்லூரியில்  பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

தனி வாழ்க்கை

நாரா நாச்சியப்பன் மணமானவர். குடும்ப விவரங்களை அறிய இயலவில்லை.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.