ஜே.வி. செல்லையா
From Tamil Wiki
ஜே.வி. செல்லையா (இருபதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை. மொழிபெயர்ப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜே.வி. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தார். வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்டகாலம் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1921இல் அரசியலில் ஈடுபட்டு, வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராக இருந்தார். ஐம்பது ஆண்டுகள் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்திலுள்ள ஆங்கில நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1936இல் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். பழந்தமிழ் இலக்கிய நூல்களைப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
ஜே.வி. செல்லையா பத்துப்பாட்டு நூலை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
நூல் பட்டியல்
- பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:செல்லையா, ஜே. வி: நூலகம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.