சவுந்தரநாயகம்பிள்ளை
From Tamil Wiki
சவுந்தரநாயகம்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வட்டுக்கோட்டையில், பழைய வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் ஆசிரியராயிருந்து புகழ்பெற்ற கபிரியேல் திரேசா விற்கு மகனாகப் பிறந்தார். இவரது தாயார் யாழ்ப்பாணத்திலிருந்த ஒந்தாச்சியார் என்பவரின் புதல்வி. வட்டுக்கோட்டை சாத்திர சாலையில் கல்வி பயின்றபின், சென்னைக்குச் சென்று பி.ஏ.பி.எல் பட்டம் பெற்று சென்னையிலேயே பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
சவுந்தரநாயகம்பிள்ளை ஒரு ஆங்கிலப் பத்திரிகையை சில காலம் வரை நடத்தினார். நன்னூற் சுருக்கம், தெலுங்கு இலக்கணம், மெய்ஞ்ஞானக் கீர்த்தனை ஆகிய நூல்களை இயற்றினார்.
நூல் பட்டியல்
- நன்னூற் சுருக்கம்
- தெலுங்கு இலக்கணம்
- மெய்ஞ்ஞானக் கீர்த்தனை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.