under review

சுப்ரபாரதிமணியன்

From Tamil Wiki
Revision as of 20:11, 6 February 2022 by Madhusaml (talk | contribs) (→‎உசாத்துணை’: Corrected internal link to external)


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

சுப்ரபாரதி மணியன்

சுப்ரபாரதிமணியன் (ஆர்.பி.சுப்ரமணியம்) ( ) தமிழில் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். சுற்றுச்சூழலியலில் ஆர்வம் கொண்டு களப்பணிகளில் ஈடுபடுபவர். திருப்பூர் நகரைச் சேர்ந்தவர். திருப்பூர் மாசுபாட்டுக்கு எதிராக எழுதிய நாவல்கள் வழியாக அறியப்படுபவர்

பிறப்பு, கல்வி

சுப்ரபாரதிமணியன்  பிறந்த ஊர்  கோவைமாவட்டத்தில் செகடந்தாளி என்னும் கிராமம், 25 அக்டோபர்1955 அன்று பழனிச்சாமி பழனியம்மாள் இணையருக்கு பிறந்தார்.தந்தையும் தாயும் நெசவாளர்கள். சுப்ரபாரதிமணியன் ஆரம்பக்கல்வியை செகடந்தாளி கிராமத்திலும் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை திருப்பூர் உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார். திருப்பூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை கணிதமும் கோவை பூ சா கோ கலைக்கல்லூரியில் முதுகலை கல்வியும் பயின்றார்

தனிவாழ்க்கை

சுப்ரபாரதிமணியன் 1984ல் சுகந்தியை மணந்தார். சுகந்தி சுப்ரமணியம் புகழ்பெற்ற கவிஞர். சுகந்தி மறைவுக்குப்பின் கிரிஜாவை மணந்தார். இரு மகள்கள். ஸ்ரீமுகி மற்றும் சுபமுகி.தொலைதொடர்புத்துறையில் பொறியாளராகப் பணியாற்றி 2014ல் ஓய்வு பெற்றார்

இலக்கிய வாழ்க்கை

சுப்ரபாரதிமணியன்னின் முதல் படைப்பு. திருப்பூர் விழிப்பு இடதுசாரி இதழில் 1977 ல் வெளிவந்த சிறுகதையான சுதந்திர வீதிகள் ( இந்தியாவின் அவசரகால கட்டம் சார்ந்த சிறுகதை) முதல் சிறுகதைத் தொகுதி அப்பா. முதல் நாவல் 1987ல் வெளிவந்த ‘மற்றும் சிலர்’. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்- ஜெயகாந்தன், கிரா, ஜெயந்தன் என்று குறிப்பிடுகிறார். சுப்ரபாரதிமணியன் திருப்பூ கலை இலக்கியப் பெருமன்றத்தின் உறுப்பினர்

இதழியல்

சுப்ரபாரதிமணியன் கனவு என்னும் இலக்கியச்சிறிதழை 1986ல் ஹைதராபாதில் ஆரம்பித்தார்.திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து தொடர்ந்து வெளிவருகிறது. கனவு இதழ் சார்பாக தற்கால மலையாளக் கவிதைகள் தற்கால கன்னடக் கவிதைகள் போன்ற சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டன. அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி ஆகியோருக்கு அறுபதாண்டு நிறைவு மலர்கள் வெளியிடப்பட்டன.

இலக்கிய இடம்

தமிழில் புறவயமான மொழியும் கச்சிதமான வடிவமும் கொண்ட யதார்த்தவாதப் படைப்புகளை எழுதியவர்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். திருப்பூரை களமாகக் கொண்டு அரைநூற்றாண்டில் சுற்றுச்சூழலிலும் மானுட உறவுகளிலும் உருவான மாற்றங்களை ஆராய்பவர். பொதுவாக வீழ்ச்சியின் சித்திரமே அவருடைய நூல்களில் உள்ளது. ஆனால் உணர்வுநிலைகளை வெளிக்காட்டாமல், நாடகீயமான தருணங்களை உருவாக்காமல், நேரடியாகச் சிந்தனைகளை விவாதிக்காமல் வாழ்க்கையை நோக்கி ஒரு கண்ணாடியை திருப்பி வைத்ததுபோல எழுதப்பட்டவை சுப்ரபாரதி மணியனின் கதைகள். அவற்றை சமூகவாழ்க்கையின் ஆவணப்பதிவுகள் என்று சொல்லலாம்.

விருதுகள்   

  • கதா பரிசு சிறந்த சிறுகதையாளருக்கானது. 1992
  • தமிழ அரசு சிறந்த நாவல் பரிசு சாயத்திரை நாவலுக்காக.
  • குசின்னப்பபாரதி அறக்கட்டளை விருது   சுப்ரபாரதிமணியன் கதைகள் நூலுக்காக
  • குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் குறுநாவலுக்காக பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம்.
  • கோவைகஸ்தூரிசீனிவாசன்   அறக்கட்டளை   பரிசு  ” பிணங்களின் முகங்கள் “ நாவலுக்காக.   .ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) 
  • என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது ( ஓடும் நதி)
  • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது  சிறந்த நாவலுக்கு. ( ஓடும் நதி)
  • கரிசல் (கி.ராஜநாராயணன் அளிக்கும்) விருது “ கனவு “ சிற்றிதழுக்காக.
  • சேலம் “ எழுத்துக்களம்”  விருது “ கனவு “ சிற்றிதழுக்காக- 25 ஆண்டுகள் நிறைவிற்காக.
  • கோவை லில்லி தேவசிகாமணி விருது சிறந்த சிறுகதையாளருக்காக
  • திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் கலைமாமணி விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்   சிறந்த நூல்கள் பரிசுகள்
  • அந்நியர்கள் ( எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றது

படைப்புகள்

நாவல்கள்
  • மற்றும் சிலர் 1987
  • சுடுமணல் 1990   
  • சாயத்திரை  1998 
  • பிணங்களின் முகங்கள் 2003 
  • சமையலறைக் கலயங்கள் - 2005
  • தேனீர் இடைவேளை 2006
  • நீர்த்துளி2011 
  • தறிநாடா
  • புத்துமண் 
  • நைரா
  • கோமணம்
  • முறிவு  - 2017
  • கடவுச்சீட்டு
  • அந்நியர்கள்
  • ரேகை
சிறுகதைத்தொகுப்புகள்:
  • அப்பா (1987, முதல் சிறுகதைத்தொகுப்பு)
  • இருள் இசை – 1995
  • ஆழம் (1997)
  • வழித்துணைகள் (1999)
  • தொலைந்து போன கோப்புகள் - 2004
  • ஓலைக்கீற்று – 2007
  • கூண்டும் வெளியும் (2009)
  • வேட்டை - (   உயிர்மை, 2011  )
  • வெள்ளம் ( உயிர்மை, 2016 )
  • குகைகளின் நிழலில் (கனவு, 2016 )
  • மூன்று நதிகள் ( ஜீரோ டிகிரி 2018 )
  • குறுநாவல்  தொகுப்புகள்:-
  • நகரம்  ( குமரி, 1998 )
  • வேறிடம் ( என்சிபிஎச், 2012 )
  • சுப்ரபாரதிமணியனின்  கதைகள் முதல் பாகம் ( 1200 பக்கங்கள் -156 சிறுகதைகள் கொண்டது. இதில்  முன்பு வெளியான  அப்பா தொகுப்பு முதல் ஓலைக்கீற்று வரை 15 சிறுகதைத்தொகுப்புகளின் எல்லாக் கதைகளும் இடம்பெற்றுள்ளன.  காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு. 2011
  • சுப்ரபாரதிமணியனின்  கதைகள் இரண்டாம் பாகம்  ( 600 பக்கங்கள் -60 சிறுகதைகள் கொண்டது. காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு. 2021 )
நாடகம்:
  • மணல் வீடு  ( மக்கள், 2005)
  • கவிதைத் தொகுப்பு
  • நீர்த்துளி ( காவ்யா , 2011 )
கட்டுரைத்தொகுப்புகள்

இலக்கியக் கட்டுரைகள்

  • பறந்து கொண்டிருக்கும் கழுகு –  -                 
  • தற்காலத் தமிழ் இலக்கியம்
  • படைப்பு மனம்  ( அகரம், 2009 ):

திரைப்படக்கட்டுரைகள்

  • மனக்குகை ஓவியங்கள்  (2009 )
  • திரைவெளி ( அமிர்தா, 2008)
  • நாளை மற்றொரு நாளல்ல  ( 2010 )

சுற்றுச்சூழல்

  • பசுமை அரசியல்
  • சூழல் அறம்
  • குப்பை உலகம்
  • மேக வெடிப்பு
  • பூமிக்கு மனிதன் தலைவனா
மொழிபெயர்ப்புப் படைப்புகள்
  • பின்னலின் பின்னல் ( 2008, சாலிடாரிட்ட் அமைப்பு,திருப்பூர் பின்னாலாடை தொழில் பற்றிய நூல் ஆங்கிலத்திலிருந்து)
  • உயில் மற்றும் பிற கதைகள் ( சாகித்ய அகாதமி, 2012 ஜெ.பி.தாஸின் ஒரியக்கதைகள் ஆங்கிலத்திலிருந்து)
  • குறும்படங்கள்:
  • சோத்துப்பொட்டலம்  (2005 ; சேவ், திருப்பூர் )
  • திருவிழா   ( 2004; முத்தமிழ்ச் சங்கம் , திருப்பூர்)
  • சுமங்கலி    ( 2009: திருப்பூர் மக்கள் அமைப்பு )
  • இரக்கம் ( வாதாபி 2021)
  • பள்ளி மறுதிறப்பு ( வாதாபி 2022 )
பயண நூல்கள்:
  • மண்புதிது ( அய்ரோப்பா, இங்கிலாந்து பயண அனுபவம் , காவ்யா, 1999) தொகுப்பு நூல்கள்:
  • அண்டை வீடு – (காவ்யா)
  • எட்டு திக்கும் ..(என் சி பி எச்)
  • பாலின வேற்றுமையும் பங்களா தேஷ் அனுபவமும் . (என் சி பி எச் )
  • எட்டு திக்கும் ((என் சி பி எச் )
  • வியட்நாம் வீரபூமி 2021
தொகுப்பு நூல்கள்
  • அசோகமித்ரன் 77 ( அ.மி பற்றியக் கட்டுரைகள்:அமிர்தா, 2010 ) 
  • நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் ( 2012 என்சிபிஎச் )
  • படைப்பும், பகிர்வும் ( 2006 : காவ்யா; சுப்ரபாரதிமணியன்  நூல்கள்                                         பற்றிய மதிபீடுகள் )
  • தற்கால மலையாளக் கவிதைகள்  ( 1994 : கனவு  மொழிபெயர்ப்பு ஜெயமோகன்)
  • பெண்மை ( மலேசியா பெண் எழுத்தாளர்கள் கதைகள்  கவிநிலா திருப்பூர் 2019 )
  • சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் கதைகள் –காவ்யா 2020
  • பாண்டிச்சேரிக்காரர்கள் ( காவ்யா ) பாண்டிச்சேரி எழுத்தாளர்கள் பற்றியக் கட்டுரைகள்
  • அ. முத்துலிங்கம் பேட்டிகள் தொகுப்பு கவின் , சென்னை 160 பக்கங்கள் 2017
  • அ. முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் 150 பக்கங்கள் , நற்றிணை சென்னை 2018
  • நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் ( 2015 ) காவ்யா )
  • அசோகமித்திரன் 77 ( அம்ருதா சென்னை )
  • திருப்பூர் 100 : கட்டுரைகள் கனவு
  • திருப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய பருத்திக்க்காடு, பருத்தி நகரம் , டாலர் சிட்டி ( மூன்று தனித் தொகுப்புகள் –கனவு )

பிற பணிகள்

  • தாய்தமிழ்பள்ளி (நிர்வாகி.  தமிழை மைய பயிற்சி மொழியாக்க் கொண்ட பள்ளி . 21 ஆண்டுகளாக  வீட்டின் அருகே  தாய் தமிழ்பள்ளி அறக்கட்டளை மூலம் )
  • புது யுக கனவு – திரைப்படச் சங்கம் செயலாளர்
  • திருப்பூர் மக்கள் அமைப்பு, சேவ், மத்திய அரிமா சங்கம் ஆகியவற்றின் மூலம் சமூக செயல்பாடுகள். கல்விக் கூட்டமைப்பு மூலம் கல்விப் பணிகள்.
  • கன்வு மூலம் கதை சொல்லி நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும். கதை சொல்லித் திருவிழா ஆண்டிற்கொரு முறை, கதை சொல்லி சிறுவர் கதை எழுது போட்டு ஆண்டுதோறும். ரூ5000 பரிசு ஆண்டுதோறும்.
  • கனவு திரைப்பட விருது, குறும்பட விருது, பெண் படைப்பாளிகளுக்கான சக்தி விருது மத்திய அரிமா சங்கத்துடன் இணைந்து.
  • கனவு மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள், குறும்பட, திரைப்படங்கள் திரையிடல்.
  • செவ்விகள் ( பேட்டிகள் ) : பல இலக்கிய இதழ்களில் வெளியாகி உள்ளன. ஒரு பேட்டி பார்வைக்கு இணைக்கப்பட்டிருக்கிறது. ( அமிர்தா இதழ் ).சன், பொதிகை., கலைஞர், ஜெயா உட்பட பலவற்றில் பேட்டிகள் ஒலிபரப்பாகியுள்ளன.
  • உரைகள் : இலக்கியக் கூட்டங்களில்  உரைகள், சிறுகதை,
  • நாவல்  பயிற்சி முகாம்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சிகள், சுயமுன்னேற்ற நிகழ்ச்சிகள்.

மொழிபெயர்புகள்:

  • The Last symphony -  Selected poems of Subrabharathimanian; Translated by R Balakrishnan.  Published by SAVE, Tiruppur
  • The Coloured curtain – Chayathirai Novel’s English Translation –R Raja, BRPC, Newdelhi
  • The Unwritten letters – Theenneer Idaivelai Novel’s  Engish Translation,   Tr. By Prema Nanda kumar SAVE, Tiruppur
  • The Faces of Dead  _ English Translation of Novel Pinainkalin Mugankal Tr. By R Balakrishnan
  • Published y Kanavu, Central Institute of Indian Languages , Mysore
  • Chayam Puranda Thira – Malayalam Translation of Chayathirai – Stanley- Cinntha, Trivandrum
  • Pannathiraa - Kannada Translation of Chayathirai     -Tamilselvi – Navayuga, Bangalore
  • Reng Rengli Sadar Mehili  -  Hindi Translation of Chayathirai           - Meenakshi Puri, Neelakant Prakashan, New delhi

உசாத்துணை’

[www.rpsubrabharathimanian.blogspot.com]