being created

நச்சினார்க்கினியர்

From Tamil Wiki
Revision as of 10:33, 22 October 2022 by Tamizhkalai (talk | contribs)

நச்சினார்க்கினியர் தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்து கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் உரைகள் எழுதியுள்ளார்

வாழ்க்கைக் குறிப்பு

சிறப்புகள்

“நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். பல்வேறு கலைகளைக் கற்றுத் துறைபோகிய வித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு எழுதுவதோடு அவர் நிற்கவில்லை. நூலில் இடம் பெறும் சமயக் கருத்து, இசை, நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணிபற்றிய நுண்ணிய விளக்கம், உலகில் உள்ள பல இனத்து மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு இவற்றை அறிந்தவர். தமிழில் உள்ள இலக்கணம் இலக்கியம் நிகண்டு காவியப் புராணம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர். சோதிடம், மருத்துவம் பற்றியும் கட்டடக்கலை பற்றியும் போதிய அறிவு இவரிடம் உண்டு. பயிர்வகையும் உயிர்வகையும் பற்றி நிறைய அறிந்தவர்

தமிழ் இலக்கிய உரை மரபில் பொருள்கோடல் என்னும் உத்தியைக் கொண்டு உரைகண்ட பெருமை நச்சினார்க் கினியருக்கு மட்டுமே உண்டு. இந்த உத்தி தொல் காப்பியத்தில் சுட்டப்பட்டிருப்பினும் நச்சினார்க்கினி யருக்கு முன்பிருந்த உரையாசிரியர்கள் யாரும் கைக் கொண்டதாகக் குறிப்புகள் இல்லை. ‘மாட்டு’ எனும் இலக்கியப் பொருள் கோடல் உத்தியைக் கொண்டு பத்துப்பாட்டிற்கு இவர் எழுதிய உரையைப் புலமை உலகம் எதிர்த்தும் ஆதரித்தும் உள்ளன. இவர் எழுதிய உரையை மறுத்தே பிற்காலத்தில் புதிய உரைகள் தோன்றக் காரணமாயிருந்திருக்கின்றன.

‘சான்றோர் உரைத்த தண் தமிழ்த் தெரியல்

ஒருபது பாட்டும் உணர்வார்க்கு எல்லாம்

உரையற முழுதும் புரைபட உரைத்தும்’

என்று நச்சினார்க்கினியர் உரைச் சிறப்பை அவரின் உரைப்பாயிரப் பகுதி சுட்டுகிறது. இவரின் உரை நூல்களில் ஏராளமான வரலாற்றுச் சிறப்புகள் பொதிந்து காணப்படுகின்றன. நச்சினார்க்கினியர் உரைநூல்களில் எண்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளதை அறிஞர்கள் சுட்டிக்காட்டி அவரின் புலமைவியந்து பாராட்டியுள்ளனர்.

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டும்கலியும்

ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத்

திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்

விருத்திநச்சி னார்க்கினிய மே’

எனவரும் வெண்பா, நச்சினார்க்கினியரைப் பற்றியும் அவர் உரை இயற்றிய நூல்கள் குறித்தும் அறிந்து கொள்ள துணைசெய்கின்றது. நச்சினார்க்கினியரின்

உரை நூல்கள் அனைத்தின் இறுதியிலும் உள்ள ‘மதுரை யாசிரியர் பாரத்துவாசி செய்த நச்சினார்க்கினியர் செய்தவுரை’ என்ற குறிப்பு மூலநூலினும் மேலாக உரை நூல் பெற்றிருந்த இடத்தைக் காட்டுகிறது.

சங்கப் பாடலின் பழைய உரைகளுள் கலித் தொகைக்கும், பத்துப்பாட்டிற்கும் நச்சினார்க்கினியர் எழுதிய உரை மட்டுமே முழுமையாகக் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றுள் பத்துப்பாட்டை உ.வே. சாமிநாதையர் பல சுவடிகளோடு ஒப்புநோக்கிய ஆராய்ச்சிப் பதிப்பை 1889ஆம் ஆண்டு வெளி யிட்டிருந்தார். உ.வே.சா. வின் அச்சுப் பதிப்பு வெளிவந்தவுடன் அந்தக் காலத்தில் தமிழ் பயின்று கொண்டிருந்த மாணவர்களுக்குப் பத்துப்பாட்டு பாடமாக இடம்பெற்றது. இந்தக் காலகட்டத்தில் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த மறைம


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.