காசிநாதப் புலவர்
From Tamil Wiki
காசிநாதப் புலவர் (1796-1854) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில் நீலகண்டருக்கு மகனாக 1796-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஜோதிட நூலில் புலமை பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
காசிநாதப் புலவர் "தால புராணம்" என்ற நூலை எழுதினார். இது ”பனங்காய்ப் பாரதம்" என்றும் அழைக்கப்படுகிறது.
மறைவு
காசிநாதப் புலவர் 1854-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- தால புராணம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.