under review

சு. இராசையனர்

From Tamil Wiki

சு. இராசையனர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சு. இராசையனர் இலங்கை வடமாகாணத்தைச் சார்ந்த வவுனியாவில் பிறந்தார். இலங்கை அரசாங்க பாடசாலைகள் பலவற்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். இவருடைய வரலாறு முற்றிலும் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

மறைமலையடிகள் தனித் தமிழியக்கத்தினைத் தொடங்கி நடத்திய காலத்தில் இலங்கையில், அவ்வியக்கத்துக்குத் துணைபுரிந்தார். தனித் தமிழில் தெளிவு பெற எழுதவும் பேசவும் தெரிந்தவர். நாவலர் சோமசுந்தர பாரதியாரின் இலக்கியக் கொள்கைகளுக்குத் தனிப்பட்ட ஊக்கமளித்தார்.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.