under review

சு. இராசையனர்

From Tamil Wiki
Revision as of 16:58, 5 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "சு. இராசையனர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == சு. இராசையனர் வடமாகாணத்தைச் சார்ந்த வவுனியாவிலே பிறந்தார். இலங்கை அரசாங்க பாடசால...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சு. இராசையனர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சு. இராசையனர் வடமாகாணத்தைச் சார்ந்த வவுனியாவிலே பிறந்தார். இலங்கை அரசாங்க பாடசாலைகள் பலவற்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். இவருடைய வரலாறு முற்றிலும் கிடைக்கப்பெறவில்லை.

இலக்கிய வாழ்க்கை

மறைமலையடிகள் தனித் தமிழியக்கத்தினைத் தொடங்கி நடத்திய காலத்தில் இலங்கையில், அவ்வியக்கத்துக்குத் துணைபுரிந்தார். தனித் தமிழில் தெளிவு பெற எழுதவும் பேசவும் தெரிந்தவர். நாவலர் சோமசுந்தர பாரதியாரின் இலக்கியக் கொள்கைகளுக்குத் தனிப்பட்ட ஊக்கமளித்தார்.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.