under review

ஜார்ஜ் அடிகள்

From Tamil Wiki
Revision as of 03:44, 20 April 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text; ; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜார்ஜ் அடிகள்
இயேசு காவியம் வெளியீடு

ஜார்ஜ் அடிகள்(மறைவு: 2008) கத்தோலிக்க மதகுரு. திருச்சி கலைக்காவிரி நுண்கலைப் பள்ளியின் நிறுவனர்.

கலைக்காவிரி

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி திருச்சியில் 1 அக்டோபர் 1977, அன்று கத்தோலிக்க இறையியலாளர் மறைதிரு ஜார்ஜ் அடிகள் அவர்களால் ஒரு கலைமையமாகத் தொடங்கப்பட்டது.தொடக்க காலத்தில் மேடை நாடகம், ஒலி நாடா தயாரிப்பு, ஒலி-ஒளி பதிவுக்கூடங்கள், கலைவிழாக்கள் என்றுதான் அதன் பணி இருந்தது. பிறகு அது நுண்கலைக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் ஜார்ஜ் அடிகள்

ஜார்ஜ் அடிகள் கலைக்காவிரியின் 1996 வரை திருச்சி கலைக்காவிரியின் இயக்குநர் பொறுப்பில் இருந்தார். 2002 வரை கல்லூரி முதல்வராக பணியாற்றினார். 2008-ல் மறைவது வரை இயக்குநர் பொறுப்பில் நீடித்தார்

ஏசுகாவியம்

ஜார்ஜ் அடிகளின் தூண்டுதலால் கவிஞர் கண்ணதாசன் இயேசுவின் வாழ்க்கையை விவரித்து எழுதிய இயேசு காவியம் என்னும் காவியத்தை எழுதினார். அதை வெளியிடுவதற்கு முன்னரே கண்ணதாசன் மறைந்தார். 1982ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனால் இயேசு காவியம் வெளியிடப்பட்டது.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Apr-2026, 06:15:54 IST