under review

பேதுறுப்புலவர்

From Tamil Wiki
Revision as of 15:56, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பேதுறுப்புலவர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். இவர் இயற்றிய ஞானப்பள்ளு முக்கியமான நூலாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

பேதுறுப்புலவர் 18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். கத்தோலிக்க சமயத்தவர்.

இலக்கிய வாழ்க்கை

இயேசுவை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட சிற்றிலக்கியம் ஞானப்பள்ளு. இந்நூலுக்கு வேதப்பள்ளு என்ற பெயரும் உண்டு. இது கத்தோலிக்க மதப்பற்றை மக்களிடையே பெருக்குவதனை குறிக்கோளாகக் கொண்டது. செபஸ்தியான் பொன்சேகா சுவாமிகளின் வேண்டுகொளுக்கிணங்கவே ஞானப்பள்ளு இயற்றப்பட்டது. ஞானப்பள்ளு 1650-ம் ஆண்டுக்கு முன்பு இயற்றப்பட்டதாகலாம்.

நூல்கள் பட்டியல்

பள்ளு
  • ஞானப்பள்ளு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Oct-2023, 09:38:20 IST