being created

சுவாமி கமலாத்மானந்தர்

From Tamil Wiki
Revision as of 11:27, 5 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)
சுவாமி கமலாத்மானந்தர்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


சுவாமி கமலாத்மானந்தர் (ஜூன் 30, 1948) துறவி, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இவர் மகாகவி பாரதியாரையும் சுவாமி விவேகானந்தரையும் இணைத்து ஆய்வு செய்து மொத்தம் 1500 பக்கங்களில் நான்கு பெரும் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார். 38 நூல்களை எழுதியுள்ளார். இவர் சத்தியகாமன், விவேகானந்ததாசன் ஆகிய புனைப்பெயர்களிலும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

சுவாமி கமலாத்மானந்தர் ஜூன் 30, 1948இல் காட்பாடியில் பிறந்து, அரக்கோணத்தில் வளர்ந்தவர். இவருடைய தாயார் பெயர் சங்கரி அம்மாள். தந்தையார் பெயர் சி. வடிவேல். 1948-ஆம் ஆண்டு இவரது குடும்பம் அரக்கோணம் வந்துவிட்டது. அரக்கோணத்தில் இவர் எஸ்.எஸ்.எஸ்-சி. வரை கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், ஆகஸ்ட் 8, 1968இல் சிரவண பூர்ணிமா நாளன்று பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார்.  ஸ்ரீமத் சுவாமி கைலாசானந்தஜி மகராஜ் இவருக்கு ‘தயாள்’ என்று பெயர் வைத்தார். 1969இல் ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சாரி தயாள் மந்திரதீட்சை பெற்றார். இவர் அரக்கோணத்தில் 1970இல் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கத்தை ஆரம்பித்தார். இந்தச் சேவா சங்கம் 2020-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது. பிரம்மச்சாரி தயாள் 1974-1975 ஆகிய ஆண்டுகளில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளுக்குரிய Training Center இல் பயிற்சி பெற்றார். இவர் மார்ச் 3, 1976இல் ஸ்ரீராமகிருஷ்ண  ஜயந்தியன்று பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போது, இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களால், ‘பிரம்மச்சாரி நிரஞ்ஜன சைதன்யா’ என்ற பெயர் வழங்கப்பட்டது. பிப்ரவரி 28,1979இல் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தியன்று இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் சந்நியாச தீட்சை வழங்கினார்.  அப்போது இவருக்கு ‘சுவாமி கமலாத்மானந்தர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.

பத்திரிகைப் பணி

இவரை ஜனவரி 1977இல் ‘ஸ்ரீராமகிருஷ்ண  விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை (24 ஆண்டுகள் ) அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியராக 1977-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றபோது, அதன் சர்குலேஷன் 1100 பிரதிகள் ஆகும். அது  பின்னர் மெல்ல மெல்ல உயர்ந்து 83,000 பிரதிகள் எட்டியது. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் சர்குலேஷனை உயர்த்தும்பொருட்டு 218 ஊர்களில் ஏஜெண்ட்களை நியமித்தார். இந்தப் பத்திரிகைக்கு அப்போது 17,000 ஆயுள் சந்தாதாரர்கள் இருந்தார்கள். ‘தமிழ்நாட்டில் பத்திரிகைக் கடைகளில் விற்பனைக்கு’ என்று வந்த முதல் தமிழ் ஆன்மிக மாதஇதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்தான். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்திற்கு ஓவியர் அம்புலிமாமா சங்கர், ஓவியர் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி போன்றவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இப்போதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி ஆகியோர் இருவரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியராக இருந்தபோது, திருமுருக கிருபானந்தவாரியார் சுமார் 30 கதைகள்/கட்டுரைகள் எழுதினார். மேலும் கவிஞர் கண்ணதாசன் இவரது வேண்டுகோளை ஏற்று 1.‘விவேகானந்த அஞ்சலி - தாயகச் செல்வன்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை 1972-ஆம் ஆண்டு ஜனவரி விஜயம் இதழில் வெளிவந்தது.

கவிஞர் கண்ணதாசன் ‘அமாவாசை நிலவு’ என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை 1977-ஆம் ஆண்டு ஜூலை விஜயம் இதழில் வெளிவந்திருக்கிறது.  

சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இவர் பிரம்மச்சாரியாக சேர்ந்ததிலிருந்து, ஏதேனும் ஒரு விதத்தில் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடும் புத்தகம் வெளியிட்டுத் துறையில் தொடர்பு கொண்டிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் வெளிவந்த சிறுவர் பகுதி படக்கதைகள் ‘கதை மலர்’ என்ற தலைப்பில் இது வரையில் 19 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவை ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன.

சுவாமி தன்மயானந்தர் ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ மூன்று தொகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்புப் பணிக்கு சுவாமி கமலாத்மானந்தரும் உதவியாளர்களில் ஒருவராக இருந்தார்.

பொது வாழ்க்கை

ஜயகாந்தன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இருவரும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள்.

இவருக்கு எழுத்தாளர்கள் கொத்தமங்கலம் சுப்பு, பி.ஸ்ரீ.ஸ்ரீ., அகிலன், சாண்டில்யன், தமிழ்வாணன், கவிஞர் வாலி, கல்கி ரா.கணபதி, கலைமகள் க.ஸ்ரீ.ஸ்ரீ.,  கலைமகள் கி.வ.ஜகந்நாதன், கல்கி சதாசிவம், திருமுருக கிருபானந்தவாரியார், நா.பார்த்தசாரதி, ஆர்.வி., சீனி.விசுவநாதன் (மகாகவி பாரதியார் பற்றிய நூல்கள் எழுதியவர்) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.

இவருக்கு பத்திரிகையாளர்களான ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், ‘தினந்தந்தி’ பா.சிவந்தி ஆதித்தன், துக்ளக் சோ.ராமசாமி, துக்ளக் எஸ்.குருமூர்த்தி  ஆகியோர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது.

ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம் தொடர்புடைய எழுத்தாளர் பெ.சு.மணி. இவர் எழுதிய ஏழு நூல்களுக்கு இவர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.

28.2.1979-ஆம் ஆண்டு புதன்கிழமை பகவான் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தியன்று இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் சந்நியாச தீட்சை வழங்கினார்.  அப்போது இவருக்கு ‘சுவாமி கமலாத்மானந்தர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.

இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியராக இருந்தபோது, திருமுருக கிருபானந்தவாரியார் சுமார் 30 கதைகள்/கட்டுரைகள் எழுதினார்.

மேலும் கவிஞர் கண்ணதாசன் இவரது வேண்டுகோளை ஏற்று 1.‘விவேகானந்த அஞ்சலி - தாயகச் செல்வன்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை 1972-ஆம் ஆண்டு ஜனவரி விஜயம் இதழில் வெளிவந்தது. 2. கவிஞர் கண்ணதாசன் ‘அமாவாசை நிலவு’ என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை 1977-ஆம் ஆண்டு ஜூலை விஜயம் இதழில் வெளிவந்திருக்கிறது.  

சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இவர் பிரம்மச்சாரியாக சேர்ந்ததிலிருந்து, ஏதேனும் ஒரு விதத்தில் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடும் புத்தகம் வெளியிட்டுத் துறையில் தொடர்பு கொண்டிருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் வெளிவந்த சிறுவர் பகுதி படக்கதைகள் ‘கதை மலர்’ என்ற தலைப்பில் இது வரையில் 19 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவை ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன.

சுவாமி தன்மயானந்தர் ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ மூன்று தொகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்புப் பணிக்கு சுவாமி கமலாத்மானந்தரும் உதவியாளர்களில் ஒருவராக இருந்தார்.

சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சுமார் 20 ஆண்டுகள் இவர் வாரம் ஒரு முறை ஆன்மிக வகுப்புகள் எடுத்திருக்கிறார்.

1979-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு  முடிய அந்தர்யோகங்கள் உட்பட சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் இவரது சொற்பொழிவுகள் இடம் பெற்றன.

தமிழ்நாட்டின் பல பாகங்களில் ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் பெயரால் இயங்கி வரும் அமைப்புகள் பலவற்றிலும், பொதுநிகழ்ச்சிகளிலும் இவர் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

1985-ஆம் ஆண்டு இவர் ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜுடன் அந்தமான் சென்று பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

இலங்கை அரசின் அழைப்பின் பேரில் 1996-ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சென்று சொற்பொழிவாற்றினார். அது பற்றிய பயணக் கட்டுரையை இவர் ‘இலங்கையில் கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் தொடர் கட்டுரையாக எழுதினார்.

1998-ஆம் ஆண்டு இவர் 20 பக்தர்களுடன் கைலாஸ் - மானசரோவர் யாத்திரை மேற்கொண்டார்.  அது பற்றிய தொடர்கட்டுரைகள் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் சுமார் 3 ஆண்டுகள்  வெளிவந்தன.

இவர் தயாரித்த ‘கைலாஷ் - மானசரோவர் யாத்திரை’ என்ற மூன்று மணிநேர வீடியோ கேசட்டை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டது.   இது வரையில் இந்த வீடியோ கேசட்டுகள் 5000-க்கும் சற்று அதிகமாக விற்பனையாகியுள்ளது.

‘கைலாஸ் மானசரோவர் யாத்திரை’ என்ற தலைப்பில் இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு மணி நேரம் குறுந்தட்டை  வெளியிட்டிருக்கிறார்.

இது வரையில் சுதேசமித்திரன், விஜயபாரதம், தினமலர், தினமணி,  தர்ம சக்கரம், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆனந்தம், குமுதம் பக்தி ஸ்பெஷல், ஓம் சக்தி, அமுதசுரபி உட்பட பல பத்திரிகைகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் வெளி வந்துள்ளன.

1970-ஆம் ஆண்டிலிருந்து இவர் சென்னை அகில இந்திய வானொலியில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். இது வரையில் சென்னை வானொலி நிலையம், மதுரை வானொலி நிலையம் ஆகியவற்றில் இவர் சுமார் 225 சிற்றுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

சென்னை தொலைக்காட்சி, சன் டி.வி, ஜெயா டி.வி, ராஜ் டி.வி, விஜய் டி.வி. ஆகியவற்றில் இவரது ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன.

2000-ஆம்  ஆண்டு ஜூலை  மாதம் இவர் அமர்நாத் யாத்திரை சென்று வந்தார்.

2000 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1- ஆம் தேதி மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

     மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலும், மதுரையிலும், மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் சென்று இவர் இப்போது சொற்பொழிவுகள் செய்து வருகிறார்.

மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள், மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியவர்களுக்கு இவர் இளைஞர் முகாம்கள் நடத்தி வருகிறார். இந்த முகாம்களில் Self improvement, Positive Thinking & Personality Developments பற்றிய கருத்துக்கள் வழங்கப்படுகின்றன.

2001-ஆம் ஆண்டு முதல் 2013 டிசம்பர் முடிய மதுரை, ஸ்ரீ சாரதாவித்யாலயா நர்சரி பள்ளி மாணவ - மாணவிகளுக்கு காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை சிறுவர்-சிறுமிகளுக்கு இதிகாசக் கதைகள், புராணக் கதைகள் போன்ற இந்து மதம் சார்ந்த கதைகளை கூறி வந்தார்.

மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஏழை மாணவ - மாணவிகளுக்கு இலவச கல்வி போதனை வகுப்புகள் நடத்தி வருகிறது. இந்த மாணவ - மாணவிகளுக்கு இவர் 2002 ஜனவரி முதல் 2016 டிசம்பர் முடிய இரவு 7.15 மணி முதல் 8.00 மணி வரை இதிகாசக் கதைகள், புராணக் கதைகள் போன்ற இந்து மதம் சார்ந்த கதைகளை கூறி வந்தார்.

தமிழ்நாட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர் பெயரில் இயங்கி வரும் பல அமைப்புகளை ஒன்றிணைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ண - விவேகானந்தர் பாவ பிரச்சார் பரிஷத்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் 7.11.2009 முதல் 31.3.2011 வரை துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு 1.4.2011 முதல் 31.5.2016 வரை தலைவராக பொறுப்பேற்றார். 

திருப்பராய்த்துறை, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் சார்பாக ‘தர்மசக்கரம்’ என்ற ஆன்மிக மாதஇதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதில் 2012-ஆம் ஆண்டு முதல், ‘ஒவ்வொரு மாதமும் ஒரு கதை’ என்று இன்று வரை இவருடைய கதைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

     ‘தினமணி’ நாளிதழ் வெள்ளிக்கிழமை தோறும் ‘வெள்ளிமணி’ என்ற ஆன்மிகச் சிறப்பிதழை வெளியிட்டு வருகிறது. அதில் 10.2.2017 முதல் பொன்மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பொன்மொழிகளை தொகுத்தவர் சுவாமி கமலாத்மானந்தர். 

     ‘குமுதம்’ குழுமம் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ என்ற பத்திரிகையை வெளியிட்டு வருகிறது. அதில் இவர் கடந்த ஆகஸ்ட் 2020 முதல் மாதம் இருமுறை  இன்று வரை தொடர்ச்சியாக பக்திக் கதைகள் என்ற தலைப்பில் கதைகள் எழுதி வருகிறார். இது தவிரவும் இவர் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ இதழில் பல ஆன்மிக கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  

2007-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு தேசிய இளைஞர் தினம் கட்டுரைப் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டிகள் 2019-ஆம் ஆண்டு வரை நடைபெற்றன. இந்தக் கட்டுரை போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10,000 மாணவ - மாணவிகள்  கலந்துகொண்டிருக்கிறார்கள்.

மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 2010 மே 20-ஆம் தேதி மாணவ - மாணவிகளுக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

கோயமுத்தூர், பெரியநாயக்கன்பாளையத்தில், ‘ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா’ என்ற ஒரு பெரிய கல்வி நிறுவனம் இருக்கிறது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் பக்தர்களுக்காக அந்தர்யோகம் ஏப்ரல் மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த அந்தர்யோகம் நிகழ்ச்சியில் கடந்த 17 ஆண்டுகளாக இவர் சொற்பொழிவுகள் செய்து வருகிறார். 

மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.45 முதல் 6.30 மணி வரை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும். இதில் இவர்  ‘ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்’ என்ற தலைப்பில்  2002-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2009-ஆம் ஆண்டு டிசம்பர் முடிய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

ஒவ்வோர் ஆண்டும், ‘தமிழ்நாடு, ஸ்ரீ ராமகிருஷ்ண - சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு’ நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இது வரை 29 பக்தர்கள் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 25 பக்தர்கள் மாநாட்டில் இவர் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் - சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டை இவர் 2010-ஆம் ஆண்டு மதுரையில் நடத்தினார். இதில் தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்து சுமார் 10,000 பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

2010-ஆம் ஆண்டு பக்தர்கள் மாநாட்டில் இவர் ‘மீனாட்சி மலர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து 2011-அருப்புக்கோட்டை, 2012-திருநெல்வேலி, 2013-பொள்ளாச்சி, 2014-திருவண்ணாமலை, 2016 - பெரம்பலூர் ஆகிய இடங்களில் மாநாடு நடத்துவதற்கு இவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். 

2014-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ‘அண்ணாமலையார் மலர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழா 2013-ஆம் ஆண்டு விமரிசையாக நடைபெற்றது. அப்போது இவர் தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்தினார்.

2013-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழாவின்போது, இவரது முயற்சியால் தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயரமுள்ள சிலைகள் 78 இடங்களில் வைக்கப்பட்டன. இவற்றில் 17 வெண்கலச் சிலைகளும், 61 பைபர் சிலைகளும் அடக்கம்.

சுவாமி விவேகானந்தரின் இரண்டரை அடி அளவுள்ள மார்பளவு சிலைகள் 100 இடங்களிலும், ஒன்றே கால் அடியில் இருக்கும் சுவாமி விவேகானந்தர் சிலைகள் 386 இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. 

மதுரை மடத்தில் 2009 டிசம்பர் 22-ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின்  12 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து மதுரையில் 1.மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி, 2.கே.எல்.என்.பாலிடெக்னிக் கல்லூரி, 3.கே.எல்.என்.பொறியியல் கல்லூரி, 4.மங்கையர்க்கரசி கலை அறிவியில் கல்லூரி, 5. சமூக அறிவியில் கல்லூரி, 6.ஸ்ரீ ராமகிருஷ்ண சமாஜம் ஆகிய இடங்களில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டன.

இவர் இது வரை காசிக்கு 13 முறையும், அயோத்திக்கு இரண்டு முறையும் யாத்திரை சென்றிருக்கிறார். 2017-ஆம் ஆண்டு பிருந்தாவனத்திற்கு யாத்திரை சென்றார். அந்த யாத்திரை அனுபவங்கள் ‘பிருந்தாவனத்திற்கு யாத்திரை’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக 2018-ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.

இலக்கிய வாழ்க்கை

ஆய்வு நூல்

இலக்கிய இடம்

பயண நூல்

நூல்கள்

1 விவேகானந்தரின் அறிவுரைகள் செப்டம்பர் 1980
2 அருள் நெறிக் கதைகள் மார்ச் 1981
3 புதிய இந்தியாவைப் படைப்போம் செப்டம்பர் 1981
4 பக்திக் கதைகள் ஏப்ரல் 1982
5 ஆன்மீகக் கதைகள் ஏப்ரல் 1982
6 ஸ்ரீராமரின் தர்ம முரசு நவம்பர் 1985
7 வீர இளைஞர்களுக்கு - சுவாமி விவேகானந்தர் ஜனவரி 1988
8 தெய்வீகக் கதைகள் ஆகஸ்ட் 1989
9 ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கதை மார்ச் 2003
10 கைலாஷ் - மானசரோவர் யாத்திரை மார்ச் 2003
11 கைலாஷ்-மானசரோவர் யாத்திரை-சி.டி மார்ச் 2003
12 அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் கதை செப்டம்பர் 2003
13 அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் 125-அறிவுரைகள் டிசம்பர் 2003
14 ஆன்மிக வினா - விடை  - பாகம் 1 செப்டம்பர் 2004
15 ஆன்மிக வினா - விடை  - பாகம் 2 நவம்பர் 2004
16 ஆன்மிக வினா - விடை  - பாகம் 3 பிப்ரவரி 2005
17 ஆன்மிக வினா - விடை  - பாகம் 4 மே 2005
18 திருவிளக்கு பூஜை செப்டம்பர் 2009
19 ஆன்மிக வினா - விடை  - பாகம் 5 ஜூலை 2011
20 இளைஞர்களின் சிந்தனைக்கு... ஜனவரி 2011
21 இளைஞர்களின் எழுச்சிக்கு விவேகானந்தரின் 150 அறிவுரைகள் மே 2013
22 சுவாமி விவேகானந்தர் 108 போற்றி செப்டம்பர் 2013
23 சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 1 செப்டம்பர் 2014
24 தெய்வபக்திக் கதைகள் 24 ஜூலை 2016
25 நாமஜப மகிமை ஜூலை 2016
26 சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 2 செப்டம்பர் 2016
27 ஒழுக்கநெறிக் கதைகள் 25 டிசம்பர் 2016
28 சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 3 செப்டம்பர் 2017
29 இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் ஜனவரி 2017
30 நீதிக் கதைகள் 31 மார்ச் 2017
31 நமது சுவாமி விவேகானந்தர் ஜனவரி 2018
32 நீதிக் கதைகள் 32 ஜனவரி 2018
33 நீதிக் கதைகள் 33 ஜூலை 2018
34 பிருந்தாவன் யாத்திரை ஜூலை 2018
35 நீதிக் கதைகள் 34 நவம்பர் 2018
36 நீதிக் கதைகள் 35 மார்ச் 2019
37 சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை - பாகம் 4 செப்டம்பர் 2019
38 மகான்களின் பொன்மொழிகள் 1000 - பாகம் 1 டிசம்பர் 2021

விருதுகள்

உசாத்துணை

[[Category:Tamil Content]]