under review

பள்ளிமிசைத் தொடர்தல்(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 03:44, 30 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பள்ளிமிசைத் தொடர்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது.பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி தலைவனை உறக்கத்தில் கட்டிவைத்தலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் இரவு நேரத்தில் உறக்கத்தை விட்டு உறங்கும் மலைநாடனைக் கட்டிவைத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

பாய் இருள் கணவனை படர்ச்சி நோக்கிச்
சேயிழை அரிவை செல்க என விடுத்தன்று(கொளு 16.19)

வெண்பா

விலங்குநர் ஈங்குஇல்லை வேல் வேலோய் சென்றீ
இலங்கிழை எவ்வம் நலியக் - கலங்கிக்
குறியுள் வருந்தாமைக் குன்று சூழ் சோலை
நெறியுள் விரிக நிலா (324)

பொருள்: யானையைக் கொடியால் கட்டியது போல நான் என் முந்தானையால் உன்னைக் கட்டியிருக்கவும் இரவிலே மானையும் மயக்கும் செவ்வரி பரந்த கண்களைக் கொண்ட பெண்ணைத் தேடிச் சோலைக்குப் போகின்றாயோ !

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2025, 19:02:31 IST