கச்சியப்பர் (பொ.யு.17)
From Tamil Wiki
கச்சியப்பர் (கந்தபுராணக் கச்சியப்பர்) (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். கந்தபுராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கச்சியப்பர் பொ.யு. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார். கந்தபுராணக் கச்சியப்பர் என்று அழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
கச்சியப்பர் கந்தப்புராணம் என்ற நூலை எழுதினார். அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் ஆசிரியர். கந்தபுராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். கச்சியப்பர் தன் மாணவர் வீரராகவ முதலியாரைப் புகழ்ந்து செய்யுள் ஒன்று இயற்றியுள்ளார்.
நூல் பட்டியல்
- கந்தப்புராணம்
உசாத்துணை
✅Finalised Page