இரா. முத்துநாகு

From Tamil Wiki

இரா. முத்துநாகு தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இரா. முத்துநாகு தேனி மாவட்டத்தில் பிறந்தார். ரெங்கசமுத்திரத்தில் பள்ளிக் கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஊடகவியலாளர், பத்திரிக்கைப் புகைப்படக்காரர், புலனாய்வுச் செய்தியாளராகப் பணியாற்றியவர்

இலக்கிய வாழ்க்கை

இரா. முத்துநாகுவின் முதல் படைப்பு ”சுளுந்தீ” நாவல். பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டது. தமிழ் நிலத்தின் பூர்வக்குடிகள் வெளியேற்றப்பட்ட கதையை இங்குள்ள பல இனக்குழுக்களின் பண்பாட்டுக் கதைகளுடனும் அவர்கள் கொண்டிருந்த பாரமபரிய அறிவுடன் எழுதினார்.

விருது

  • ”சுளுந்தீ” நாவல் 2019இல் ஆனந்தவிகடனின் சிறந்த நாவல் பரிசுபெற்றது.

இணைப்புகள்