தி இந்தியன் லேடீஸ் மேகஸின்
பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட சென்னை ராஜதானியின் முதல் ஆங்கிலப் பெண்கள் பத்திரிகை ’தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’. 1901-ல், இதனை கமலா சத்தியநாதன் தொடங்கினார். இந்தியா முழுமைக்குமான இதழாக ‘தி இண்டியன் லேடீஸ் மேகஸின்’ வெளிவந்தது.
எழுத்து, வெளியீடு
1901--1918 வரை இவ்விதழ் வெளிவந்தது. குழந்தைகளின் உயர்கல்விக்காக கமலா சத்தியநாதன் இங்கிலாந்து சென்றதாலும், பொருளாதாரக் காரணங்களாலும் இதழ் நின்று போனது. பின் மீண்டும் அவர் இந்தியா திரும்பிய பின் செயல்பட ஆரம்பித்து 1927-1938 வரை வெளிவந்தது. ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி இவ்விதழ் வெளியானது. 15-ம் தேதிக்குள் சந்தாதாரர்களைச் சென்றடைந்தது.
உள்ளடக்கம்
மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவை திருமணம், பெண் கல்வி, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழில் கட்டுரைகள் வெளியாகின. சிறுகதைகளும் அவ்வப்போது வெளியாகியிருக்கின்றன.
சரோஜினி நாயுடு, அன்னிபெசண்ட், மேரி கரோலி, பண்டித ரமாபாய், லேடி ஹர்னாம் சிங், கொர்னிலியா சொராப்ஜி, ஹெலன் கெல்லர் உள்ளிட்ட பலர் இவ்விதழில் எழுதினர். பெண்கள் பலர் நன்கொடை செலுத்தி இவ்விதழ் வளர்ச்சிக்கு உதவினர். கமலா சத்தியநாதன், By an Indian Lady என்ற பெயரிலும், Hannah Krishnamma என்ற பெயரிலும், ஹெச். கிருஷ்ணம்மா, An Indian Mother என்பது போன்ற புனை பெயர்களிலும் பல்வேறு விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதினார். சரோஜினி நாயுடு இதில் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் கவிதைகளைக் குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. சாரா டக்கரின் கட்டுரைகளும் இவ்விதழில் வெளியாகியுள்ளன. இந்தியா முழுமையிலிருந்தும் பல பெண்கள் இவ்விதழுக்குப் பங்களித்துள்ளனர்.
’தி லண்டன் டைம்ஸ்’, ‘தி லண்டன் டெய்லி டெலிக்ராப்’ போன்ற இதழ்கள் தி இண்டியன் லேடீஸ் மேகஸின் வரவைப் பாராட்டி எழுதின. எட்வின் அர்னால்ட், ஹெலன் கெல்லர் உள்ளிட்டோரும் இவ்விதழைப் பாராட்டி வரவேற்றனர்.
இதழின் பிற சிறப்புகள்
வரலாற்று இடம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.