being created

தாமரைக்கண்ணன்

From Tamil Wiki
தாமரைக்கண்ணன் (வீ.இராசமாணிக்கம்)

தாமரைக்கண்ணன் (வீ.இராசமாணிக்கம்: 1934 - 2011) எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எனப் பல களங்களில் இயங்கியவர். பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தனது படைப்புகளுக்காகத் தமிழக அரசின் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சிப்பாகம் என்ற கிராமத்தில், மா.வீராசாமி - வீ.பாஞ்சாலி அம்மாள் இணையருக்கு ஜூலை 1, 1934-ல் மகனாகப் பிறந்தார். சிறு வயதில் வாசித்த நூல்களால் எழுத்தார்வம் சுடர் விட்டது. உயர் கல்வியை நிறைவு செய்தவர் சென்னைப் பல்கலையில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் முதுநிலை கல்வியியல் பட்டம் பெற்று ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார்.

தனி வாழ்க்கை

ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே எழுத்துத் துறையிலும் ஈடுபட்டார். பத்மாவதியைத் திருமணம் செய்து கொண்டார். கதை, கவிதை, கட்டுரை, நாடகம் என இவரது ஆர்வம் பலவாறாக விருந்தது. பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

இதழியல் பணிகள்

1957-ல் இவரது முதல் கட்டுரை ‘மங்கையர்க்கரசி’ சௌபாக்கியவதி இதழில் வெளியானது. முதல் சிறுகதை ‘செவ்வாய்க்கிழமை’ தமிழன் புரட்சி இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களுக்கும் எழுதத் தொடங்கினார்.   எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறிபாக்கத்தார், அகரத்தான், தாமரை எனப் பல்வேறு புனைப்பெயர்களில் எழுதினார்.

கல்வெட்டு ஆராய்ச்சிகளும் பிற கண்டுபிடிப்புகளும்

கல்வெட்டு ஆராய்ச்சியில் இவரது விருப்பம் சென்றது. 1976-ல், ஒரத்தியில் நந்திவர்மன், கன்னர தேவன் (கன்னட) கல்வெட்டுகளைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்தார். தொடர்ந்து, அனந்தமங்கலம் சமணர் கல்வெட்டு, விஜயநகர காலச் செப்பேடு, தெள்ளாற்றில் ஜேக்ஷ்டாதேவியின் அரிய சிலை, திண்டிவனம் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு போன்றவற்றைக் கண்டறிந்து ‘தினமணி’, ‘தினமணி சுடர்’ இதழில் ஆதாரங்களுடனும், படங்களுடனும் வெளியிட்டார். 978-ல், மதுராந்தகம் வட்டம் ஈசூரில் சோழர்காலப் பஞ்சலோகப்படிமங்களைக் கண்டறிந்து தொல்பொருள் துறைக்குத் தகவல் தந்தார்.  மதுராந்தகம் வட்டம், இடைகழிநாடு, கருவம்பாக்கத்தில் வீரகேரளன் காசைக் கண்டறிந்து அந்தனைத்தொல்பொருள்துறைக்குக் கையளித்தார். கொற்றவை சிலை, சாத்தன் சிலை, சமண தீர்த்தங்கரர்கள் சிலை,  திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் எனப் தொன்மையான பல ஆலயங்களை, மண்ணுக்கடியில் புதைந்துபோனவைகள் இவர் வெளிப்படுத்தியுள்ளார். கல்வெட்டுக்களை, செப்பேடுகளை, காசுகளை, சிற்பங்களை, பழமையான லயங்களைக்க் கண்டறிவது, கல்வெட்டுக்களைப் படியெடுப்பது என்று ஆய்வு சார்ந்து இயங்கினார்.

தனது ஆய்வுகளையும் கண்டுபிடிப்புக்களையும் பற்றி பல்வேறு கருத்தரங்களிலில் கலந்துகொண்டு பேசியதுடன் தினமணி, தினமணி சுடர், தினமலர் போன்ற இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். மாணவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும்  பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தினார். தனது ஆராய்ச்சிகளுக்காக தமிழக அரசின் பரிசினையும் பெற்றார்.

பிறபணிகள்

விருதுகள்

  • சங்கமித்திரை நாடக நூலுக்கு தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு கிடைத்தது
  • வரலாற்றுக் கருவூலம் நூலுக்கு தொல்பொருளியல் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு கிடைத்தது.
  • பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய ‘இரகசியம்’ நாடகத்திற்கான முதல் பரிசு
  • சென்னை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழங்கிய பல்கலைச் செம்மல்
  • நியூயார்க் உலகப்பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம்
  • திண்டிவனம் தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய நாடக மாமணிப் பட்டம்
  • ஸ்ரீராம் நிறுவனம் அளித்த பாரதி தமிழ்ப்பணிச் செல்வர்
  • தமிழக அரசு வழங்கிய மாநில நல்லாசிரியர் விருது
  • தமிழக அரசு திருக்குறள் நெறித் தோன்றல் விருது
  • பண்ருட்டி எழுத்தாளர் சங்கம் வழங்கிய இலக்கியச் சித்தர் பட்டம்

மறைவு

இலக்கிய இடம்

தாமரைக்கண்ணன் கவிதை,கட்டுரை,கல்வெட்டு ஆய்வு என்று இலக்கியம்,வரலாறு சார்ந்த படைப்புகளை உருவாக்குவதோடு நாடகம், நாவல்,சிறுகதைகளிலும் அவர் தம்திறமையான ஆற்றலைத் தெளிவாகப்புலப்படுத்தி வருகிறார். ஆர்வமுடன் அறிவுத்துறை,கலைத்துறை,கல்வித்துறை ஆகியவற்றிலெல்லாம் ஈடுபட்டு வெற்றி விளைத்துச் சுற்றியிருப்போரைச் சுகம் பெறச் செய்திடும் இவர்தம் ஆற்றலே ஆற்றல்” என்கிறார் கலைஞர் கோ.வெள்ளையாம்பட்டு சுந்தரம்.

நூல்கள்

நாவல்கள்
  • தங்கத்தாமரை
  • மூன்றாவதுதுருவம்
  • நெஞ்சின் ஆழம்
  • அவள்காத்திருக்கிறாள்
  • பன்னீர்சிந்தும்பனிமலர்
  • நெஞ்சத்தில் நீ
சிறுகதைத் தொகுப்புகள்
  • மனக்காற்றாடி
  • கொன்றைப்பூ ('அத்திப்பூ' என்னும் நாடகம் 11-ம் வகுப்பு துணைப்பாடநூலில் இடம் பெற்றது)
  • அறுசுவை
  • ஏழுநாள்
  • எல்லாம்இன்பமயம்
  • உயர்ந்தஉள்ளம்
  • கனவுக்கண்கள்
  • நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்
நாடகங்கள்
  • கிள்ளிவளவன் (‘கொடைவள்ளல் குமணன்’ என்னும் நாடகம் 12-ம் வகுப்பு சிறப்புத் தமிழில் இடம் பெற்றது)
  • வெண்ணிலா
  • மருதுபாண்டியர்
  • அலெக்ஸாண்டர்
  • கைவிளக்கு
  • சங்கமித்திரை (தமிழகஅரசின்பரிசுபெற்றது)
  • பேசும்ஊமைகள்
  • நல்லநாள்
  • நல்லூர் முல்லை (கன்னடம், இந்தி, தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது)
  • வளையாபதி
  • பள்ளிக்கூடம்
  • இரகசியம்
  • சாணக்கியன்
வரலாற்று நூல்கள்
  • கருணைக்கடல்
  • திருநாவுக்கரசர்
  • ஒருமனிதன்தெய்வமாகிறான்
  • கருமாரிப்பட்டிசுவாமி
  • சம்புவரையர்
  • ஆய்வு நூல்கள்
  • ஆட்சீசுவரர் திருக்கோயில்
  • வரலாற்றுக் கருவூலம் (தமிழகஅரசின்பரிசுபெற்றது)
  • வரலாறுகூறும்திருத்தலங்கள்
அறிவியல்நூல்
  • வியப்பூட்டும் விண்வெளி்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.