being created

சி.அருமைநாயகம்

From Tamil Wiki
Revision as of 20:37, 31 January 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories. அருமைநாயகம் (1858- 10-மே 1914) தமிழில் தொடக்ககாலத்தில் நாவல்களை எழுதியவர். இவருடைய மீதி இருள் என்னும் நாவல் 1898ல் வெளிவந்தது. கிறிஸ்தவ பிரச்சார நோக்கத்துடன் எழுதியவர்

பிறப்பு, கல்வி

சி.அருமைநாயகம் குமரிமாவட்டம் இரணியல் என்னும் ஊரில் பிறந்தார். கிறிஸ்தவ மதத்தை தழுவி நெய்யூரில் கிறிஸ்தவ உபதேசியார் ( catechist ) ஆக பணிபுரிந்தார். இலங்கைக்குச் சென்று அங்கே தமிழ் கூலி மிஷன் (Tamil Coolie Mission) என்னும் மதப்பிரச்சார நிறுவனத்தில் பணியாற்றினார். திரும்பி வந்து 1894 முதல் நாகர்கோயில் கிறிஸ்தவ செமினாரியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். நாகர்கோயில் லண்டன்மிஷன் ஹோம்சர்ச்சில் 1901 முதல் 1914 வரை டீக்கனாராகவும் இருந்தார்.

தனிவாழ்க்கை

அருமைநாயகத்தின் மனைவி பெயர் லைசாள். குணமணி என்னும் மகன். அருமைநாயகம் 10 மே 1914ல் மறைந்தார்

இலக்கியவாழ்க்கை

அருமைநாயகம் தன் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பும்பொருட்டு நிறைய எழுதினார். மீதி இருள் என்னும் சிறிய நாவல் அவருடைய முக்கியமான படைப்பு. அருமைநாயகம் எழுதிய கிறிஸ்தவ பக்திப்பாடல்கள் நாகர்கோயில் ஹோம்சர்ச் பிரார்த்தனை நூலில் இடம்பெற்றுள்ளன

இலக்கிய இடம்

அருமைநாயகம் தமிழ்நாட்டு கிறிஸ்தவ உரைநடை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்

நூல்கள்

  • என் தங்கை
  • என் பாட்டனார்
  • மீதி இருள்
  • மூடிய முத்து
  • ஆயனும் ஆடும்

உசாத்துணை