தாமரைக்கண்ணன்
தாமரைக்கண்ணன் (வீ.இராசமாணிக்கம்: 1934 - 2011) எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எனப் பல களங்களில் இயங்கியவர். பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தனது படைப்புகளுக்காகத் தமிழக அரசின் விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சிப்பாகம் என்ற கிராமத்தில், மா.வீராசாமி - வீ.பாஞ்சாலி அம்மாள் இணையருக்கு ஜூலை 1, 1934-ல் மகனாகப் பிறந்தார். சிறு வயதில் வாசித்த நூல்களால் எழுத்தார்வம் சுடர் விட்டது. உயர் கல்வியை நிறைவு செய்தவர் சென்னைப் பல்கலையில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் முதுநிலை கல்வியியல் பட்டம் பெற்று ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார்.
தனி வாழ்க்கை
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே எழுத்துத் துறையிலும் ஈடுபட்டார். பத்மாவதியைத் திருமணம் செய்து கொண்டார். கதை, கவிதை, கட்டுரை, நாடகம் என இவரது ஆர்வம் பலவாறாக விருந்தது. பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
இதழியல் பணிகள்
1957-ல் இவரது முதல் கட்டுரை ‘மங்கையர்க்கரசி’ சௌபாக்கியவதி இதழில் வெளியானது. முதல் சிறுகதை ‘செவ்வாய்க்கிழமை’ தமிழன் புரட்சி இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களுக்கும் எழுதத் தொடங்கினார். எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறிபாக்கத்தார், அகரத்தான், தாமரை எனப் பல்வேறு புனைப்பெயர்களில் எழுதினார்.
கல்வெட்டு ஆராய்ச்சிகள்
பிறபணிகள்
விருதுகள்
மறைவு
இலக்கிய இடம்
நூல்கள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.