under review

மதுரைப் பெருங்கொல்லன்

From Tamil Wiki
Revision as of 12:03, 26 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "மதுரைப் பெருங்கொல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == மதுரையில் இரும்புத்தொழில் செய்து வாழ்ந்தார். மிகப்பெரிய அத்தொழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரைப் பெருங்கொல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் இரும்புத்தொழில் செய்து வாழ்ந்தார். மிகப்பெரிய அத்தொழிற்சாலை வைத்திருந்தவர் என்பதால் மதுரை பெருங்கொல்லன் என்றழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

குறுந்தொகையின் 141வது பாடல் மதுரைப் பெருங்கொல்லன் பாடினார். குறிஞ்சித்திணைப்பாடலாக, தலைவியின் கூற்றாக பாடல் அமைந்துள்ளது. யானையால் தாக்குண்ட புலி செந்நாயின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் கொடிய காட்டு வழியில் வரும் தலைவனை நினைத்து வருந்தி தலைவி அவனை வரவேண்டாம் என்று கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை: 141

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே.

உசாத்துணை

  • புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.