சுவாமி கமலாத்மானந்தர்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
சுவாமி கமலாத்மானந்தர் (ஜூன் 30, 1948) ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இவர் மகாகவி பாரதியாரையும் சுவாமி விவேகானந்தரையும் இணைத்து ஆய்வு செய்து நான்கு பெரும் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
பிறப்பு, கல்வி
சுவாமி கமலாத்மானந்தர் ஜூன் 30, 1948இல் காட்பாடியில் பிறந்து அரக்கோணத்தில் வளர்ந்தவர்.
தனிவாழ்க்கை
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மீது பற்றுக்கொண்டு ஆகஸ்ட் 8,1968இல் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் துறவியானார். செப்டம்பர் 01,2000இல் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவரானார். 11முறை காசி யாத்திரையும் ஒருமுறை கைலாஷ் யாத்திரையும் (1998) ஒருமுறை அமர்நாத் யாத்திரையும் (2000)மேற்கொண்டார்.
பொது வாழ்க்கை
சுவாமி விவேகானந்தரின் புகழைப் பரப்புவதற்காகத் தமிழ் நாடு முழுவதிலும் ஏறத்தாழ 120 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையை வைத்துள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்களின் மாநாட்டை தாமே முன்னின்று ஆறுமுறை நடத்தியுள்ளார். (மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர்).
இலக்கிய வாழ்க்கை
‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக 24 ஆண்டுகள் பணியாற்றினார். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் ‘தர்மச்சக்கரம்’ மாத இதழில் ஆன்மிகக் கதைகளை எழுதினார்.
இலக்கிய இடம்
நூல்கள்
விருதுகள்
உசாத்துணை
[[Category:Tamil Content]]