எமிலி டிரீ கிளேஷேர்
எமிலி டிரீ கிளேஷேர் (Emily Tree Glaisher) (திருமதி பௌர்ன், பௌர்ன் சீமாட்டி) இந்திய தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ஓவியர். கல்வியாளர் ஆல்பர்ட் பௌர்னின் மனைவி
வாழ்க்கை
ஆல்பர்ட் பௌர்ன் எமிலி டிரீ கிளேஷேர் (Emily Tree Glaisher) ஐ 1888 ல் மணந்துகொண்டார். எமிலி புகழ்பெற்ற தாவரவியல் நிபுணர். ஓவியரும்கூட. கொடைக்கானலில் தாவரவியலில் ஆய்வுசெய்த பிலிப் ஃபைசனுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அவருடைய ஓவியங்களை பிலிப் ஃபைசன் தன்னுடைய நீலகிரி மற்றும் பழனி மலைகளின் தாவரங்கள் ( The Flora of the Nilgiri and Pulney Hill-tops)என்னும் நூலில் பயன்படுத்தியிருக்கிறார். பிலிப் பைசனின் மாணவரான மா. கிருஷ்ணன் தன் நினைவுகலில் எமிலி டிரீ கிளேஷேர் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
தனிவாழ்க்கை
எமிலி - பௌர்ன் தம்பதிகளுக்கு ஒரு மகள். பின்னாலில் இந்திய வனத்துறை அதிகாரியான ஸ்டீபன் காக்ஸ் Stephen Cox அவளை மணர்ந்தார்.
மறைவு
எமிலி ட்ரீ கிளேஷர் 18 செப்டெம்பர் 1954ல் மறைந்தார்.