நாவேந்தன் (முருகேசன்)
From Tamil Wiki
- நாவேந்தன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாவேந்தன் (பெயர் பட்டியல்)
நாவேந்தன் (பிறப்பு: நவம்பர் 30, 1945) ஒரு தமிழ்ப் பாடலாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். திரைப்படப் பாடல்கள் எழுதியிருக்கிறார்
பார்க்க: நாவேந்தன் (இலங்கைத் தமிழ் எழுத்தாளர்)
வாழ்க்கைக் குறிப்பு
நாவேந்தன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், இராதாபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி - தையல்நாயகி, இணையருக்கு நவம்பர் 30, 1945 அன்று பிறந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.
நூல்கள்
கவிதை
- வீணை மலர்கள்
- இன்று வந்த இறந்த காலம்
- மலர்களின் மாநாடு
நாடகம்
- அன்னை எங்கே (கவிதை நாடகம்)
பொது
- ஆரோக்கியமே ஆனந்தம் (நல்வாழ்வு விழிப்புணர்வு கையேடு)
மொழிபெயர்ப்புகள்
- உலகக் கவிதை மேடை அமைப்போம் (50 சோவியத் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து செய்த தமிழாக்கம்)
- கலீல் ஜிப்ரானின் தத்துவக் கதைகளும் கவிதைகளும் (கலீல் ஜிப்ரானின் கவிதைகளின் தமிழாக்கம்)
- இந்துக்களின் வாழ்க்கை நெறி, (முனைவர் சி கே கரியாலியின் Hindu way of Life, நூலின் தமிழாக்கம்)
- பெண்களுக்கே சொந்தம் (முனைவர் சி கே கரியாலியின் Womens Own நூலின் தமிழாக்கம்)
- தமிழ் நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல் (முனைவர் சி கே கரியாலியின் Amma Model of Development iñ TN நூலின் தமிழாக்கம்)
- நான் பெறாத இரு புதல்வியர் (ஆளுநர் எஸ் எஸ். பர்னாலாவின் My Other Two Daughters என்ற நூலின் தமிழாக்கம்)
- உலகம் பேசும் காதல் மொழி (ஆங்கிலக் காதல் கவிதைகளின் தமிழாக்கம்)
இசைப் பாடல் குறுந்தகடுகள்
- ஜய ஜய சாயி
- ஆனைமுகமும் ஆறுமுகமும்
- அருட்பெருஞ்ஜோதி
- சிவாலயம் (இசையமைத்தவர் திருச்சி லோகநாதன்)
பாடல் எழுதிய திரைப்படங்கள்
- கல்யாண வைபோகம்
- வாணி மஹால்
- சங்கராபரணம் (தமிழ்)
- கேட்டவரெல்லாம் பாடலாம்
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்
- தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு(2011)- Dinamani.com
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:48 IST