under review

அணையாவிளக்கு

From Tamil Wiki
Revision as of 11:50, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:நாவல்கள் to Category:நாவல்)

To read the article in English: Anayaa Vilakku (novel). ‎


அணையாவிளக்கு (1956) ஆர்வி எழுதிய நாவல். பொதுவாசிப்புக்குரிய நேரடியான எளிமையான காதல்கதை. சாதிக்கலப்புத் திருமணத்தை முன்வைக்கும் படைப்பு.

எழுத்து பிரசுரம்

ஆர்வி எழுதிய அணையாவிளக்கு 1955-ல் சுதேசமித்திரன் இதழில் வெளியாகியது. 1956-ல் நூலாகியது. நூலுக்கு தி.ஜானகிராமன் முன்னுரை எழுதியிருந்தார்.

கதைச்சுருக்கம்

சந்தானம் கதையின் நாயகன். அவன் வேற்றுசாதிப்பெண் ஒருத்தியை காதலிக்கிறான். அவன் அம்மா ஆசாரத்தில் ஊறியவள். அவள் இறுதியில் காதலின் மேன்மையை உணர்ந்து அவளை மருமகளாக ஏற்றுக்கொள்கிறாள். தஞ்சையின் பின்னணியில் கிராமியச் சித்தரிப்புடன் ஆர்வி இந்நாவலை எழுதியிருக்கிறார்.

விருதுகள்

அணையா விளக்கு நாவலுக்கு தமிழ்வளர்ச்சிக் கழக விருது 1956-ல் வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

அணையாவிளக்கு பொதுவாசிப்புக்கான நாவல். தஞ்சைமாவட்ட வட்டாரவழக்கும் சூழல் சித்தரிப்பும் இந்நாவலை ஆர்வியின் சிறந்த நாவலாக ஆக்குகின்றன என்று தி. ஜானகிராமன் முன்னுரையில் சொல்கிறார்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jan-2023, 06:08:02 IST